Showing posts with label இம்மானுவேல் சேகரன். Show all posts
Showing posts with label இம்மானுவேல் சேகரன். Show all posts

இம்மானுவேல் சேகரன் (1924: -1957)

தேவேந்திரர் மக்களை சாதிய அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களையும் மனிதர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார். சாதிய அடிமைத்தனத்தை அழித்தொழிக்கும் துணிவுமிக்கப் போராட்டத்தில் தனக்கு எந்தநேரமும் மரணம் நேரலாம்/ ஆதிக்க சாதிவெறியர்களால்தான் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலும் துணிவுமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்த சாதியொழிப்பு போராளிகளில் முதன்மையானவர் இம்மானுவேல் சேகரன்.

இளமையும் கல்வியும் :
இராமநாதபுரம் மாவட்டம்/ முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தில் (பரமக்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது) 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் நாள் சேது என்ற வேதநாயகம் - ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே ஆங்கிலக் கல்வி கற்றவர். இவரது தந்தை வேதநாயகம் ஆசிரியராகவும்/ வழக்கறிஞராகவும் பணியாற்றினார். களையூர் முதற்கொண்டு பல கிராமங்களில் தனியாகப் பள்ளிகளை நடத்தி வந்தார். ஆங்கிலத்தையும்/ கணிதத்தையும் திறமையாகக் கற்பிப்பதில் புகழ் பெற்றிருந்தார். பரமக்குடியில் புகழ்பெற்ற நாட்டு வக்கீல்களில் (பர்ன்ற்)) ஒருவராக திகழ்ந்தார். இளமையிலேயே தனது தந்தையின் சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டார் இம்மானுவேல். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். ((இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் நஜ்ங்க்ங்ய் ஙண்ள்ள்ண்ர்ய்)பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். அவர் படிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தைப்போலவே/ விளையாட்டிலும் திறமையாக இருந்தார். கால்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்1.
இராணுவத்தில் பணி
சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம்/ உருது/ இந்தி/ ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்2.இராணுவ வாழ்க்கையில் அவர் அனுபவித்த சமத்துவம்/ மரியாதை போன்றவற்றைத் தனது சமுதாய மக்கள் அனுபவிக்க முடியவில்லையே என வேதனைப்பட்டார். என் தாய் நாட்டையும்/ மக்களையும் அன்னியர்களிடமிருந்து/ இன்னுயிரைத் தந்து காக்க நான் தயாராக இருக்கும் போது/ என் சமூக மக்களை இந்த இழிநிலையிலிருந்து மீட்க ஒருவரும் இல்லையே என வேதனையடைந்தார். 'என் நாட்டைக் காக்க ஏராளமான இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள் ஆனால்/ என் சமூகத்தினரைக்காக்க எந்தத் தலைவன் இருக்கிறான்? இந்தக் கேள்வியினால் என் நாட்டைக் காப்பதை விட என் சமூக மக்களைக் காப்பதே என் முதல் கடமை' எனக் கூறி அவில்தார்ப் பணியை உதறித் தள்ளினார்.
திருமணமும் இல்வாழ்வும்:
1946ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைய்த் தனது இலட்சிய வாழ்க்கையின் துணையாக ஏற்றார்.சமூக விடுதலைப் பணிக்குத் திருமண வாழ்க்கைத் தடையில்லைள என்பதையுணர்ந்த தியாக உள்ளத்தோடு குடும்பச் சுமையை/ தனது ஆசிரியப் பணியோடு சேர்த்து சுமந்தார் அமிர்தம் கிரேஸ்.அம்மையார் அவர்கள் வீராம்பல் எனும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு சாமுவேல்/ மரியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். இராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பை 1938 ஏப்ரல் மாதம் முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியையானார்.இந்த இலட்சிய தம்பதிகளுக்கு மேரிவசந்த ராணி/ பாப்பின் விஜய ராணி/ சூரிய சுந்தரி பிரபா ராணி/ மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.தனது இலட்சிய வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார். தியாக உள்ளத்துடன் ஆசிரியப்பணியையும்/ குடும்பப் பொறுப்புகளையும் மனநிறைவுடன் கவனித்துக் கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கொஞ்சமும் தளர்வோ சோர்வோ இன்றி தீரமுடன் இம்மானுவேல் 'மக்கள் விடுதலைப்பணியில்' ஈடுபட்டதற்கு அமிர்தம் அம்மையாரின் தியாகமும்/ அற்ப்பணிப்புமே காரணம் எனலாம்..இளமையிலேயே கணவனை இழந்த போதிலும் அதே தியாக/ அற்பணிப்புடன் அம்மையார் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இறுதிவரை கணவரின் இலட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த அம்மையார் 1985ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் காலமானார்.
காங்கிரஸில் இம்மானுவேல்:
தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அக்காலத்தில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. இப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட பார்ப்பனர் 'அரிசனத் தந்தை' என அழைக்கப்பட்ட திரு. வைத்தியநாத அய்யர். இவர் இந்தப் பணியை மதுரை மாவட்டத்தை மையமாக வைத்துச் செய்தார்.காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த திரு. கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த திரு. வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். வீராம்பல்/ கருமல்/ பேரையூர்/ மருதகம்/ பெரியஇலை/ காக்கூர் சிக்கல் முதலிய கிராமங்களில் இம்மானுவேல் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த ஊர்களுக்கு இவர் சென்று விட்டாலே மக்கள் திரண்டு வருவார்கள். ஊரின் பொது இடத்திலோ/ மரத்தடியிலோ அல்லது வீட்டுத் திண்ணையிலோ கூட்டங்கள் நடத்தினர். அரிக்கேன் விளக்கு/ பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில்தான் கூட்டங்கள் நடந்தன.'இந்தநாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியை காங்கிரஸ் பேரியக்கம் விரட்டிவிட்டது. இனியும் நாம் பிறருக்கு பயந்து கொண்டு அடிமைகள் போல வாழவேண்டியதில்லை. சட்டமும்/ அரசும் நமக்கு ஆதரவாக இருக்கின்றன; இனி நாம் ஆதிக்க சாதியினருக்கு தலை வணங்கும் ஈனப்பிறவிகளாக இருக்க வேண்டியதில்லை/ நம்மை இழிவுபடுத்தும் கொடுமைகள் அனைத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற எழுச்சிமிகு பேச்சுக்கள் இளைஞர்கள் மனதில் ஆவேசமான விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டு போராட்ட நெருப்பைப் பற்றி எரிய வைத்தது.காங்கிரஸ் கட்சியின் மூலம் காமராஜ்/ கக்கன் ஆகியோரோடும் இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.கமுதி : திரு. முத்துமாணிக்கம்கருமல் : திரு. ஜெயராஜ்கன்னிச்சேரி திரு. சந்தானம்கூரியூர் : திரு. எஸ்.கே. வேலுபரமக்குடி : திரு. பாலச்சந்திரன்சித்தூர் : திரு. காளியப்பன்.காங்கிரஸில் உறுப்பினராய்ச் சேர்ந்த நாளில் இருந்து சாகும்வரை தூய வெள்ளை கதராடையே உடுத்தி வாழ்ந்து வந்தார்
வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி:
இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.அதே நேரத்தில் கட்சித்தலைவர்களிடமும் பெரியோரிடமும் மரியாதையுடன் பழகுவார். தனது குடும்பத்தையும் சொந்த நலனையும் விட சமுதாயத்தையே பெரிதாக நேசித்தார். இசையில் ஈடுபாடு உள்ளவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்/ நாமக்கல் கவிஞர் ஆகியோரது பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஏ. எம். ராஜா பாடல்களை விரும்பிப்பாடுவார். சிலம்பாட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறாவிட்டாலும் கூட அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.பிறப்பினால் கிறித்தவராக இருந்தாலும் இம்மானுவேல் தாழ்த்தப்பட்ட இந்துக்களிடையே எள்ளளவும் பாரபட்சமின்றி பழகி வந்தார். இம்மானுவேல் ஒரு கிறித்தவன்/ அவனை எப்படித் தலைவனாக ஏற்றுக் கொண்டீர்கள்? என்ற சாதி -இந்துத் தலைவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எண்ணிய திரு.கக்கன் இம்மானுவேலின் பெயரை 'இம்மானுவேல் சேகரன்' என மாற்றினார்.செல்லூர் - வீட்டை காலிசெய்து வெங்கட்டான் குறிச்சிக்கு தட்டு/ முட்டு/ சாமான்களை வண்டியில் ஏற்றி வந்த அலுப்பில் இம்மானுவேல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால்/ சாதி வெறியர்கள் இமைப்பொழுதும் தூங்காது அவரைக் கொல்லத் தருணம் தேடி அலைந்தனர். அன்றிரவு வீட்டின் கூரைமீதேறி ஓட்டைப் பிரித்து எடுத்தனர். திருடர்கள் போல அனைவரும் தூங்கிவிட்டனரா இல்லையா? என்பதை அறிய/ ஒரு கல்லை வீட்டிற்குள் போட்டனர். அக்கல் மூத்த குழந்தை தலையருகில் விழவே விழித்துக் கொண்டது. குழந்தை இம்மானுவேலை எழுப்ப கட்டிலில் படுத்திருந்தவர் விழித்துப் பார்த்ததும் திடுக்கிட்டார். வரிசையாக கூரையில் ஓடுகளே இல்லை.'யார்ரா அது எவன் ஓட்டைப் பிறிச்சவன்?' என்று சத்தம் போட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தார். கூரையிலிருந்து குதித்து பத்துக்கும் குறையாத கும்பல் தலைதெரிக்க ஓடிக் கொண்டிருந்தது. மனைவி சொல்லியும் கேளாது கூட்டத்தினரைத் தான் ஒருவராகவே துரத்தியடித்தார். இம்மானுவேல் குரலை கேட்டதும்/ குலைநடுங்கி வயற் காட்டிற்குள் கூட்டம் ஓடி ஒளிந்தது.
தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் துண்டு கிளாஸ் போராட்டம்:

அந்நாளில் தமிழகத்தின் பல கிராமங்களில் பின்பற்றப்பட்டு வந்த தீண்டாமைக் கொடுமைகளில் இதுமொன்று. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப்பொதுவிடங்களில் சமமாக நடத்தப்படுவதில்லை. குறிப்பாக உணவகங்கள்/ டீ கடைகளில் இம்மக்களுக்கென்று தனிக்குவளை (சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி) வைக்கப்பட்டிருக்கும். இக்குவளையில்தான் அம்மக்களுக்குக் காப்பி அல்லது டீ தரப்படும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் டீ குடிப்பதற்கு முன்பு அக்குவளையைத் தானே கழுவிக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கென்று கடைக்கு வெளியே தகரக் குவளை அல்லது சிரட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அவைகளைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.இக்கொடுமைக்கெதிராக இம்மானுவேல் மக்களைப் போராடத் தூண்டினார். 'துண்டுகிளாஸ்' வைத்துள்ள கடைகள் மீது போலீசில் புகார் செய்து தண்டணை பெற்றுத்தந்தார். சில கடைகளில் துண்டுகிளாஸ்களைக் கடைக்கு முன்னாலேயே உடைத்தெறிந்தார். சிலர் இப்போராட்டத்தால் டீ கடைகளை மூடிவிட்டனர். இம்மானுவேல் இப்போராட்டத்தை முது குளத்தூர் பரமக்குடியைச் சுற்றியிருந்த பல கிராமங்களில் மிகத் தீவிரமாகக் செயல்படுத்தினர்.
குடிதண்ணீர்ப் போராட்டம்:
தெருநாய்கூட ஊர்க்குளத்தில் தண்ணீர் குடிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களால் தண்ணீர் எடுக்க முடியவில்லை' இவ்வாசகத்தை இம்மானுவேல் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் குறிப்பிட தவறுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப் பொதுக் கிணற்றிலோ அல்லது குளங்களிலோ குடி தண்ணீர் எடுக்க முடியாது. சாதி இந்துப் பெண்கள் தங்கள் பாத்திரங்களில் பிடித்து ஊற்றுவதையே கொண்டுவர வேண்டும். இப்படி ஒரு அவல நிலை இன்றைக்கும் இந்தியாவின் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இம்மானுவேல் இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்
கொண்டுலாவிப் போராட்டம் :
இக்கிராமம் முதுகுளத்தூரிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் அரசு வெட்டித்தந்த கிணறு ஒன்றிருந்தது. இக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்பதற்காகச் சாதி இந்துக்கு மலத்தையும்/ சாணத்தையும் கிணற்றில் அள்ளிப் போட்டனர்.தாழ்த்தப்பட்டவர்கள் அரும்பாடுபட்டுக் கிணற்றைச் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் எடுத்தனர். பின்னரும் சாதி இந்துக்கள் மலத்தையும்/ சாணத்தையும் போட்டதால் மக்கள் இம்மானுவேலிடம் முறையிட்டனர்.இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்
இம்மானுவேல் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும்

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.



இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.
"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.
அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தேவேந்திர பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.
இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."
கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."
"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."
முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:
"On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".
கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.
"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."
திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.
திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.
முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.
முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'தேவர், காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.
சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த தேவர், தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.