நாலு பேருக்கு நல்லதுன்னா... நான் வாயாடிதான்!

'தங்கச்சிப் பாப்பாவைத் தூக்கிச் சுமக்கிறது அக்கா பாப்பா!’
 என்று கல்யாண்ஜியின் கவிதை ஒன்றில் வரும். அந்த அக்கா பாப்பாபோல இருக்கிறார் நந்தினி. ஆனால், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த 'குழந்தைகள் கல்வி தொடர்பான பொது விசாரணை’யில் நாடு முழுவதும் இருந்து நீதிபதிகளாகப் பங்கெடுத்த பல அதிகாரிகள் மத்தியில், இந்த 14 வயதுச் சிறுமி யும் ஒரு நீதிபதியாகச் செயலாற்றினார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நந்தினி, கடந்த சில வருடங்களாக குழந்தைகள் நலனுக்காக 'தனி மனுஷி’யாகப் போராடி வருகிறார்.

''ஈரோடு மாவட்டம் ஏ.ஜி.புதூர்தான் என் ஊர். அப்பா, ஒரு விவசாயக் கூலி. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலைமையில், தொடர்ந்து என்னைப் படிக்கவைக்க முடியலை. ஏழாம் கிளாஸ் முடிச்சதுமே 'போதும்’னு சொல்லிட்டாங்க. படிக்க முடியாத வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், காட்டு வேலைக்குப் போகப் பழகிட்டேன். அப்போதான் 'ஸிணிகிஞி’ என்ற அமைப்பு, கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு இலவசமா டியூஷன் எடுக்கிறதாக் கேள்விப்பட்டேன். மரத்தடியில் சின்னதா லைட் போட்டு பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. வேலை எல்லாம் முடிச் சுட்டு ஆசையாப் போய்ப் படிப்பேன்.

என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, அந்த அமைப்பு நடத்தும் 'குழந்தைகள் பாராளுமன்றத்தில்’ என்னைப் பிரதம மந்திரியா தேர்ந்தெடுத்தாங்க. 'செய்யுறது காட்டு வேலை. நாம பிரதம மந்திரியா?’ன்னு எனக்கு ஒரே சிரிப்பா இருக்கும். ஆனா, அவங்க செய்யச் சொன்ன வேலைகள் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கு என்னவெல்லாம் கிடைக்கலையோ, அதை எல்லாம் மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கிற மாதிரி பண்ணணும். இவ்வளவுதான் வேலை. ரொம்ப ஆர்வமா செஞ்சேன். குழந்தைகளுக்கான சட்டங்கள், அரசாங்கம் என்னவெல்லாம் திட்டம் போடுது, அதை எப்படி நாம வாங்கிபயன் அடையுறது... இப்படிப் பல விஷயங் களைத் தெரிஞ்சுக்கிட்டேன். 'ஊருக்கு நல்லது செய்யப்போறவ, நாலெழுத்து படிச்சாத்தான் நல்லது’ன்னு அவங்களே என்னை கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு சேர்த்துவிட்டாங்க. படிச்சுக் கிட்டே ஊர்ல இருக்கும் குழந்தைகள்உரிமைக் காக வேலை பார்த்தேன். வேலைன்னா, சம்பளம் எல்லாம் கிடையாது. நானா ஆசைப் பட்டுத்தான் செஞ்சேன். ஆனா, ஊரில் உள்ள வங்க எல்லாம் நக்கலா, கிண்டலா சிரிச்சாங்க. ஆனா, அதைக் கண்டுக்காம, வேலை பார்க்கக் கிளம்பிருவேன்.

எங்க ஊரில் உள்ளவங்க யாரும் அதிகம் படிச்சவங்க இல்லை. அதுலயும் பொம்பளைப் புள்ளைங்களை ஏழு, எட்டு படிக்கவெச்சுட்டு, அதோடு நிறுத்திடுவாங்க. அவங்களை சாயங்கால நேரத்துலயாவது படிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு உருப்படியா ஒரு இடம் இல்லை. 'ஒரு சமுதாயக் கூடம் கட்டிக்கொடுத்தா, படிக்க வசதியா இருக்கும்’னு ஊராட்சி மன்றத் தலைவர்கிட்ட மனு கொடுத்தேன். மனுவை வாங்கிக்கிட்டு என்னை ஏற இறங்கப் பார்த்தவர், 'உன் வயசுக்கு நீயெல்லாம் மனு கொடுக்க வந்துட்டே. முதலில் மனுன்னா என்னன்னு தெரியுமா?’ன்னு கேட்டு சிரிச்சார். நான் பொறுமையா, மனுன்னா என்ன... ஊராட்சி மன்றத் தலைவர் மனுவுக்கு நடவடிக்கை எடுக்கலைன்னா, அடுத்ததா யார்கிட்ட மனு கொடுக்கணும்னு எல்லாத்தையும் சொன்னேன். அப்படியே மலைச்சு நின்னுட்டாரு.

சமுதாயக் கூடம் கட்டுறதுக்கு கலெக்டர்கிட்ட இருந்து ஆர்டர் வர்ற வரைக்கும் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கு நடையா நடந்தேன். இப்போ, சமுதாயக் கூடம் கட்டி முடிச்சு, புள்ளைங்க எல்லாம் அதுல உட்கார்ந்து தான் படிக்கிறாங்க.

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறதுனால, காலை யில் பள்ளிக்கூடம், சாயங்காலம் ஊர்ப் பிரச்னைன்னு நேரம் சரியா இருக்கு. இப்ப எங்க ஊரில் பள்ளிக்கூடம் போகாத பிள்ளை களே கிடையாது.

நான் ரொம்பப் படிச்சவ கிடையாது. எல்லா விஷயமும் தெரிஞ்சவளும் கிடையாது. என் வயசுக்கு எனக்கு என்ன தெரியுமோ, அதைத் துணிச்சலாப் பேசுவேன். இதனால் என்னை 'வாயாடி’ன்னு சொல்வாங்க. அந்தப் பேச்சுதான் இன்னிக்கு சமுதாயக் கூடத்தைக் கட்டுறதுக்குக் காரணம். இப்போ பொது விசாரணையில் கலந்துக்கிட்டப்போ, 'தமிழ்நாட்டுல உள்ள பல பள்ளிக்கூடங்கள் கூரைக் கொட்டகை, மரத்தடி களில்தான் செயல்படுது. இன்னும் பல ஊர்களில் ஆசிரியர்களே மாணவர்களைக் கழிவறை களைச் சுத்தம் பண்ணச் சொல்லிக் கட்டாயப் படுத்துறாங்க. இதை எல்லாம் ஏன் இன்னும் சரிபண்ணலை’ன்னு கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டேன். பஸ் விபத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் அநியாயமாசெத்துப் போறதுக்கு ஏன் கடுமையா நடவடிக்கை எடுக்கலைன்னு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டேன். எல்லாரும் 'நல்லா தைரியமா பேசினே’ன்னு பாராட்டினாங்க. ஆனால், நான் பாராட்டு வாங்குறதுக்காகப் பேசலை. எனக்குப் பிரச்னை தீரணும். அதுதான் முக்கியம்!'' - தீர்க்கமாக முடிக்கிறார் நந்தினி.


Thanks : Vikatan

அவதார் vs எந்திரன்

அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார் , டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலா பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.  இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் , புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன்  போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ , கிரீன்லாந்து , ஐஸ்லாந்து , லிபியா , ருமேனியா , உகண்டா , மடகார்ஸ்கர்  தீவுகள் , ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன்  பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட  தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என  ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன் , சந்திரன் , யுரேனஸ் , நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பிய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா , கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம்பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும் , உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த
கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.

இப்படிக்கு
சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்

APPEAL TO MUSIC DIRECTORS –

Are Tamizh music directors too attached to their tunes and ignore proper deliverance of lyrics (Final output)?


Few examples (and actual list can be exhaustive) and listen to stated songs quietly and most importantly without bias:

1. ARR – Sivaji – “Sahana Sahana” – Male voice struggles so much and so many mistakes in Tamizh ucharippu. Where it is supposed to be “Semitha kadhal idhu...”, singer delivers as “Semithu kadhal idhu”....there is no meaning for this at all. Imagine Harish Raghavendra in the male portion. Song would have been a great treat. Still it is a hit, no doubt, however has justice been done?

2. ARR – Sivaji – “Vaaji Vaaji” – Female voice sings “azhagai as azhugai”...complete meaning changes. Imagine Mahathi & song would have gone to next level.

3. ARR – “Kilimanjaro song” – Chinmayi is the saving grace to be honest. Javed Ali has made so many mistakes and in fact, he says “sevaloda thangachiye...” where I believe it should have been “Evaloda thangachiye...”. Again "Zhu", "Zha" ucharippu taken its toll. Imagine Karthik or so many other Tamizh singers would have taken popularity to next level.

4. Ilaiyaraja – Thalapathi – “Yamunai aatrile” – Listen very carefully and mistakes in ucharippu can be spotted (ex: Instead of “Padhai parthida....singer sings as “pathai parthida..”). Imagine Chitra and it would have been top notch.

5. G V Prakash - Madrasapattinam – “Pookal pookum”. Such a great composition and male singer struggles so much to sing in Tamizh. “Zha”, “Zhu” ucharippu has been taken for granted. Can understand why a North Indian singer is roped in here, considering type of composition; however is it good to compromise on Tamizh ucharippu? Imagine Hariharan (who has both Hindi & Tamizh reach) for this song and it would have been a “National award” material for this year. An opportunity lost.

There are so many examples like this and such examples can be found for almost every Music Director. Film Director’s & Lyricists to raise their voice politely and not compromise on the final output. Also, they should not get intimidated by Music Director’s popularity, rather should strive for good team work. So much money is being spent on big movies; why compromise?

On the contrary, listen to unflawed outputs from Sankarabaranam, Sindhu Bhairavi, Salangai Oli etc...(just few samples and musical hits). Such quality of tunes & also right choice of singers. Eternal songs.

There are some director’s like Bharathiraja, Bala et al who are absolutely clear on their task and get best output without compromising on nativity or Tamizh ucharippu. Also Late director Jeeva has got good output from music directors.

As long as there is a thing called mind emanating "thoughts", there is going to be “ego”. As long as there is “ego”, there are going to be mistakes. So above mistakes are going to happen. Film director’s to make an effort to minimize demanding best final output from music director and have a say in choosing right singers. No offense meant in this article to music director’s as our Tamizh industry is doing great justice with some stunning numbers, however voice also needs to be raised to set right direction.

With humility,
DLN [D.Lakshminarasimhan]
United Kingdom
narasimhan_d@yahoo.com
Twitter: DLN_MK

Thanks : Behindwood

வந்தன சிவா

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

−க்கட்டுரையாசிரியரின் கருத்துக்களில் நவீன தொழில் நுட்பங்களை முற்றாக நிராகரிக்கும் போக்கு அவ்வப்போது வெளிப்பாட்டாலும், சுற்றாடலையும், மனிதகுலத்தையும் பற்றிய கரிசனை எதுவுமில்லாமல், அதிக லாப வேட்கை காரணமாக பல தேசிய நிறுவனங்கள் விஞ்ஞான தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதுபற்றி சிறப்பான முறையில் விமர்சிக்கப்படுவதுடன் −ப்போக்கிற்கு எதிராக சர்வதேசரீதியில் உருவாகி பலமடைந்து வரும் மக்கள் −யக்கங்கள் அடைந்துவரும் வெற்றிகள் பற்றிய சித்திரத்தையும் தருகிறது. உலகமயமாக்கலின் மற்றொரு கோரமுகத்தைத் தரிசிக்க முடிகிறது.

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

முதலில் நான் சந்தைகளை நேசிக்கிறேன் எனக்கூறி எனது பதிலை தொடங்குகிறேன். உள்ளூர் 'சப்ஜீகளை விற்பனை செய்யக்கூடிய, ஒருவர் பெண்களோடு அளவளாக்கூடிய, உள்ளூர் சந்தைகளை நான் நேசிக்கிறேன். உண்மையிலேயே வேதனையான விடயம் என்னவென்றால், சந்தை என்பது வாழ்க்கைக்கான கோட்பாட்டினை நெறிப்படுத்தும் ஒரே விடயமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான். அத்துடன் 'வோல் ஸ்ட்ரீட்' விழுமியத்தின் ஒரே மூலமாக மாறியுள்ளது. ஏனைய சந்தைகளும் விழுமியங்களும் காணாமற் போகின்றன. −வற்றையே நான் நிராகரிக்கிறேன். தண்ணீரின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால்கூட நீர்வளப்பேணலுக்கும், அரிதான அதனை முகாமைப்படுத்துவதற்குமான தீர்வு அதன் கடைசித் துளியைக்கூட விலை கொடுத்து வாங்கக்கூடியவர்களின் கரங்களிலே அதனை விடுவதல்ல. புதுப்பித்தல் என்ற எல்லைக்குட்பட்டவாறு நிலையிருத்தலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அதனை சமூகத்தின் கைகளிலேவிட வேண்டும். அது சந்தைத் தளத்திற்கு அப்பால் கொண்டு வரப்பட்டு சமூகத்திடம் மீண்டும் கையளிக்கப்பட்டு பொதுமையான முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும்.

நிலையிருப்பு சனத்தொகை −ல்லாத −டத்தில் நிலையிருப்பு அபிவிருத்தி நிலவ முடியுமா?

நிலையிருப்பற்ற சனத்தொகை அதிகரிப்பு (non sustainable population growth) என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் அறிகுறியாகும் என்றே நான் நினைக்கிறேன். சனத்தொகை அதிகரிப்பு என்பது சுயமாக தனி −லட்சணமாக ஏற்படுவதில்லை. −த் தரவுகளைப் பாருங்கள் 1800 வரை −ந்தியாவின் சனத்தொகை நிலையானதாக −ருந்து வந்தது. குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமையும் நிலங்கள் −ழக்கப்பட்டமையுமே சனத்தொகை அதிகரிப்பு தொடங்குவதற்கு ஏதுவாகின. −ங்கிலாந்தில் விவசாயிகளை பொதுநிலத்தை விட்டு வெளியேற்றிய பின்னரே மிகக்கூடிய சனத்தொகை அதிகரிப்பு வீதம் காணப்பட்டது. மக்களின் வளங்கள் −ழக்கப்படுவதுதான் ஜீவாதார தேடலை உருவாக்குகிறது. நிச்சயமற்ற சந்தையில் அன்றாட வேதனத்திற்காக விற்கவேண்டிய உழைப்பால் வளங்கள் பதிலீடு செய்யப்படுவதுதான் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. சனத்தொகை அதிகரிப்பு என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் விளைவாகும்.

விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவன் நான். உலகமயமாக்கல் −ல்லாத வேளையிலும் விவசாயிகள் சுரண்டலுக்கு உள்ளாகினர். உலகமயமாக்கல் நவகாலனியத்திற்கு −ட்டுச் செல்லப் போகின்றது என்ற தங்களது கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எம்மால் உலகமயாக்கலுக்கு வெளியே நிற்க −யலாது. உலக வர்த்தக அமையம் (WTO) ஒரு யதார்த்தமாகிவிட்டது - தாங்கள் கூறியதைப் போல எந்த ஒரு நாடும் அதிலிருந்து தப்பிவிடமுடியாது...

WTO விதிகள் கடதாசித்தாள்மீது எழுதப்பட்டவையே தவிர, நான் எனது விரிவுரையிலே குறிப்பிட்டதைப் போல, கடவுளால் வழங்கப்பட்டவை அல்ல. எனவே, அவை −ந்த மண்ணையும் கங்கைகளையும் போல மாற்றமுடியாத யதார்த்தங்கள் அல்ல. அவ்விதிகள் மாற்றப்படவேண்டியவை. 'சீட்டில்' மாநாடு கூறும் செய்தி −துதான். அதனை மாற்றுவதற்கான வழி யாதெனில் மக்களின் ஜீவாதாரங்களை கருத்திற் கொள்ளச் செய்வதும் வர்த்தகத்தின் ஒவ்வொரு படிநிலையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களிலும் வளங்களின் நிலையிருத்தலை கருத்திற் கொள்ளச் செய்வதுமாகும். அவ்விதிகள் நிலையிருத்தலையும் மக்கள் பாதுகாப்புடன் −ருக்கும் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

−ந்தியாவில் விவசாயிகள் எதிரிடையான மானியத்தையே பெறுகிறார்கள்.. (உரிய) மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியானால் அசமத்துவமான போட்டியாளர்கள் உலகமயமாக்கலை நோக்கிச் செல்வது எவ்வாறு?

உண்மையான பிரச்சினையே அதுதான். சமதையை ஏற்படுத்தும் தளம் ஒன்று எமக்கு வாய்க்கும் என்று எம்மிடம் கூறப்பட்டது. WTO வீதிகள் வரையப்பட்டபோது −ந்திய விவாசாயிகளுக்கு நீதியான சந்தை ஒன்று எமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. உருகுவே பேச்சுவார்த்தையுன் பின்னர் GATT ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை அந்த ஒரே ஒரு பிரதான காரணத்தை முன்வைத்தே −ந்தியா நியாயப்படுத்தியது. (ஆனால்) அது தலைகீழாக மாறிவிட்டது. எம்மிடம் −ப்போதிருப்பது மிகவும் அசமதையை ஏற்படுத்தும் தளமாகும். வடநாடுகள் அல்லது OECD நாடுகள் 343 பில்லியன் டொலர்களை மானியமாகக் கொடுக்கின்றன. உருகுவே பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற பின்னர் −ம்மானியம் உண்மையில் −ரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் −ந்தியா எதிரிடையான மானியமாக 25 பில்லியனை (மாத்திரமே) வழங்குகின்றது. −ங்கு ஒருவர் வடக்கு எவ்வாறு கூடுதலான மானியத்தை வழங்குகிறது என வாதமிடலாம். −வ்வாதம் வேறு திசைநோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும் என நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறு விவசாயிகளையும், மண்ணையும், நீரையும், உயிர்ப்பன்மயத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்பது... முழு தவறிழைக்கத்தக்க வர்த்தக அமைச்சர்களாலும் வர்த்தக செயலாளர்களாலும் வரையப்பட்ட வர்த்தகவிதிகளை... −வ் அசமத்துவமான நிலைத்தனமானது −ப் புவியையும் உற்பத்தியாளர்களையும் அழித்துவிடாமல் −ருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் மீள்வரைவது எவ்வாறு என்பது பற்றியே வாதிட வேண்டும்.

கலாநிதி சிவா அவர்களே, உற்பத்தித் திறன் குறைந்த பயிர் உற்பத்தி செய்வதும், உயிர்பன்மயத்தையும் உயிர்க்கரு திரள்வுகளையும் பேணுவதும் உண்மையிலே விவசாயினது பணியா? −ப்பணியை நிபுணர்களிடம் விடக்கூடாதா?

நல்லது. பெண்விவசாயிகள் என்ற நிபுணரிடம் அப்பணியை விட்டுவிடுவது பற்றி நான் பேசினேன். −துவரை எமக்கு உயிர்ப்பன்மயம் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் உயிர்ப்பன்மய நிபுணராக பெண்கள் - பால் பிரிவுப்படி - −ருக்க நேர்ந்ததுதான். சிறிய விவசாயிகளாக அவர்கள் உலகின் மிக வறிய பகுதியில் வாழ நேர்ந்ததுதான். ஏனெனில் அவர்களது நோக்கு நிலையில் அது அவர்களுக்கு உற்பத்தித்திறன் மிகுந்ததாக உள்ளது. ஒரு தனிஏகபோக வர்த்தக நிறுவனத்திற்கு அது உற்பத்தித் திறனற்றதாக −ருக்கலாம். ஏனெனில் அவற்றிற்குத தேவையானது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் சோளம் நட வேண்டும் அல்லது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் கோர்னோலா வளர்க்க வேண்டும் என்பதாகும். ஆனால் அது உற்பத்தி திறன் மிக்கது. மிகச் சிறப்பான முறையில் நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி குடும்பத்திற்கு உணவூட்டவும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய சிறிதளவு உபரியைப் பெறவும், உங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பவும் போதுமானது. உண்மையில் சமூகங்களே −வ்வளங்களை எமக்காக காப்பாற்றி வைக்கின்றன. வேறு எவரது கரங்களிலும் அவை −ருக்கும்போது எம்மால் அதில் நம்பிக்கை வைக்க முடியாது.

நான் முன்னர் மன்சான்டோவுடன் பணியாற்றினேன். ஒரு சாதாரண வினாவை உங்களிடம் நான் வினைவ வேண்டும். உத்தேசமாக சமுதாய ஆளுகைக்குட்பட்ட சுற்றுவட்டாராம் ஒன்றை அதன் நிலையிருப்பை உறுதிசெய்யும் விதத்திலேயே அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட்டால், −ந்தியா போன்ற நாடுகளுக்கு தாங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

சமூகங்களை ஸ்தாபனப்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமும், ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள மக்களுக்கும் தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன்மூலமும், கூட்டு செயற்பாட்டின் மூலம் மாத்திரமே நிலையிருப்பு செய்யக்கூடிய வளங்களை கூட்டாக முகாமைப்படுத்தக்கூடிய விதத்தில், மக்கள் பங்கேற்கும் ஜனநாயக கட்டுமானத்திற்கூடாக அத்தகைய அளவுகோலை உருவாக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக நாம் ஈடுபட்டு வருகிறோம். என்னிடம் ஆழமான குழாய் கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு தேவையான பணமும் அதிகாரமும் −ருந்தால் எனது மிகவும் வறிய பெண்மணி ஒருத்தியாகத்தான் −ருப்பாள். ஆகவே, ஒரு கிராமத்தின் நிலத்துகடியில் உள்ள நீர்வள பேணுகைக்கான ஒரே வழி காரஷ்−ல் தண்ணீர்ப் பஞ்சாயத்து செய்ததைப் போல செய்வதுதான் - நீரை வரையறைக்குட்பட்ட வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதே அதுவாகும். தாக்க விளைவுகளை மக்கள் உணரக்கூடிய விதத்தில் ஆளுகை முறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆகவே பன்பமுகப்படுத்தப்பட்ட, நேரடியான ஜனநாயகத்தை புனர்நிர்மாணம் செய்யவேண்டிய தேவை எமக்குள்ளது. பயிரிடுவோரை தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களாக கருதவில்லை. ஏனெனில் அவர்களது செயல்களின் விளைவுகள் அயலவர்களால் ராஜவண்ணத்துப் பூச்சியை நான் கொன்று விடுகிறேன். கூட்டுத்துவம் என்பது சமூகங்களின் ஒருமைப்பாடாகும். −வையை பிரதானமானவை - தனிமனித பயிரிடுவோன் அல்ல. −வையே தீர்மானம் நிறைவேற்றும் அடிமட்ட அலகுகளாகும். −வற்றிற்கே கூட்டுத்தாபனங்களும் அரசாங்கங்களும் பதிலளிக்க வேண்டும். சீட்டிலுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனை −துவாகும். சரியான −டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சரியான மட்டத்தில் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் கண்காணிப்பை வட்டாரமயப்படுத்தும் −ப்பரிசோதனையானது - எமது உயிருக்கு உலகமயமாக்கல் அச்சுறுத்தல் விடுத்தபோதும் - உலகெங்குமுள்ள சமூகங்கள் ஈடுபட்டு உருவாகிக் கொண்டிருக்கும் புதுவிதமான ஜனநாயக நிறுவனமாகும்


Source : http://www.aaraamthinai.com/interview/apr18vsiva.asp

நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!

மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.



சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

 நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!


நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.




"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.

இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.

"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.
 
இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.


சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!

- குள.சண்முகசுந்தரம்


படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

***
ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.

அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.

கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...

உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்." - இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய... http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

Source : Vikatan

என் கேள்விக்கு என்ன பதில்.

Touching SHORT FILM "AASAI"

Tamil Commercial Short film- thuru

Mittaai Veedu - by M.Balaji and team

Nice Short Film (Tamil)

Ramasway


வெற்றி

கோவையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அயன் படம் பார்ப்பதற்காக கோவை கங்கா தியேட்ட்ரில் டிக்கெட் வாங்க, எழுபது ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டர் பாயிலை கொடுத்திருக்கிறார்கள். அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக ஜெயராமன் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டு தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்கிறது.மிகுதியாக வாங்கிய காசுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன், வழக்கு செலவு ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்கும்.

எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200??

Source : cablesankar.blogspot.com

நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டு பிடித்த, நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.


இப்படி 53 நாட்கள் உறைய வைத்து, பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். ஆனால் எட்வர்ட்சின் சோதனை வேறு விதமானது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையை அவர் மேற்கொள்ளவில்லை. சினைப்பையில் இருந்து கருமுட்டைகளை வெளியே எடுக்கும் அவரது முறையும் மிகக் கடினமானதாக இருந்தது.எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷூக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் ஐ.வி.எப்., குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி.சி.ஆனந்த் குமார், சுபாஷின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, 1997ல், "கரன்ட் சயின்ஸ்' இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,"உலகிலேயே முதன்முறையாக ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ்தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் முகர்ஜி தன் ஆய்வில் வெற்றி பெற்ற போது, மேற்குவங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நேரம். எல்லாத் துறைகளிலும் அரசியல் தலையிட ஆரம்பித்தது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைப் பேறு தொழில்நுட்பங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு கதிரியக்க டாக்டர், ஒரு மகப்பேறு நிபுணர், ஒரு பொதுடாக்டர் என மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை அவரது பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு நியமித்தது. கடந்த 1978, டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகம் நடத்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுபாஷூக்கு அழைப்பு வந்தும் கூட, மாநில அரசு அனுமதியளிக்கவில்லை. அறிவியல் பத்திரிகைகளில் இதுகுறித்து அவர் எழுதவும் அனுமதியில்லை. 1981, ஜூனில் சம்பந்தமில்லாத கண்மருத்துவத் துறைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்களில் ஒருவராகிய சுனித் முகர்ஜி கூறியதாவது: அவரது சோதனை மிகவும் எளிதானது. மிகச் சரியான விளைவுகளைத் தந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐ.வி.எப்., மருத்துவமனைகளும், இந்திய மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சி வழிகாட்டல் நெறிமுறைகளும் இன்று, அவரது முறையின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ளன. பங்குராவில் இருந்து கோல்கட்டாவுக்குத் தன் ஆராய்ச்சி பற்றிய பேப்பர் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வார இறுதிநாளிலும் அலையாய் அலைந்தார். அவருடன் நான், மகப்பேறு நிபுணர் சரோஜ் கந்தி பட்டாச்சார்யா இருவரும் செல்வோம். அவருடன் இருந்தவர்கள் அவரை அழித்து விட விரும் பினர். நாங்கள் பலமுறை அவமானப்படுத்தப் பட்டோம். எவ்விதத்திலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு சுனித் முகர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். எட்வர்சுடன் தற்போது தொடர்பில் உள்ளவரும், முகர்ஜியை அறிந்தவரும், ஐ.வி.எப்., நிபுணருமான சுதர்சன் கோஷ் தஸ்திதார், "அவர் போன்றவர்கள் நிறைய சாதிக்க முடியும். அவர் இருந்திருந்தால் நோபலுக்குத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்' என்றார்.


Source : Dinamalar

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்

நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் -
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!

இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.


கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?

ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.

பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?

குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.

பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?

சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.

இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?

கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.

கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.

ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.

துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.

கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!

டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.

ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.

கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
( நன்றி: http://koottanchoru.wordpress.com )

சர்ச்சில் இன்னொரு ஹிட்லர்

லட்சக் கணக்கான மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்த ஹிட்லருக்கும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. வங்காளத்தில் 1943ல் ஏற்பட்ட பெரும் பட்டினிச் சாவுகளில் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் சாவதற்குக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்தான் என்று இந்திய விஞ்ஞானியும் எழுத்தாளருமான மதுஸ்ரீ முகர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இயற்பியல் படித்து விட்டு உயர் படிப்புக்கு அமெரிக்கா சென்ற மதுஸ்ரீ சயண்ட்டிஃபிக் அமெரிக்கன் இதழின் முன்னாள் ஆசிரியர். தற்போது ஜெர்மனியில் வசிக்கும் மதுஸ்ரீ இதற்கு முன்பு அந்தமான் தீவுகளில் வாழும் ஆதிவாஅசிகள் பற்றிய நூலை எழுதியிருக்கிறார்.
வங்காளப் பஞ்சம் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தன் ஆய்வைத் தொடங்கிய மதுஸ்ரீ பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கும் பல்வேறு ஆவனங்களை ஆரய்ந்ததில் முப்பது லட்சம் மக்களின் சாவுக்கு சரிச்சில் பொறுப்பேற்ருதான் ஆகவேண்டும் என்ர முடிவுக்கு வந்தார். எனவே தன் நூலுக்கு சர்ச்சிலின் ரகசிய யுத்தம் ( சர்ச்சில்ஸ் சீக்ரெட் வார்) என்றே பெயரிட்டிருக்கிறார்.

சர்ச்சிலுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் உறையூரில் தயாரித்த சுருட்டுகள் மிகவும் பிடித்தவை. ஆனால், இந்தியர்களை அறவே பிடிக்காது. ஹிட்லருக்கு எப்படி யூதர்கள் மீது வெறுப்பு இருந்ததோ, அதே போல சர்ச்சிலுக்கும் இந்தியர்கள் மீது கடுமையான இனத் துவேஷம் இருந்தது. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரான காந்தியை, அரை நிர்வாண பக்கிரி என்று வர்ணித்தது சர்ச்சில்தான். இந்தியர்களால் தஙகளைத்தாங்களே ஆளமுடியாது. சுதந்திரம் கொடுத்தால் சிதறி சின்னாபின்னமாகிப் போய்விடுவார்கள் என்று சொன்னார் சர்ச்சில். இன்று அவருடைய பிரிட்டனில் சுதந்திர இந்தியாவில் கல்வி பெற்று தகுதியடைந்த இந்திய டாக்டர்களுக்குத்தான் மிகப் பெரிய கிராக்கி.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் மக்களின் ஹீரோவாக சர்ச்சில் இருந்தார். ஆனால் யுத்தம் முடிந்ததும் நடந்த தேர்தலில் அவர் கட்சி ஆட்சியை இழந்தது.

சர்ச்சிலுக்கு இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் இருந்த வெறுப்புக்கு அளவே இல்லை.1040கஇல் முஸ்லிம் லீக் உருவாகி காங்கிரசுக்குப் போட்டியாக அரசியல் செய்தபோது, சர்ச்சிலின் கருத்து என்ன தெரியுமா? ‘ரொம்ப நலலது. சிக்கிரமே ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொண்டு சாகட்டும் ரத்தக் களறி ஏற்படட்டும்.”

அப்படிப்பட்டவர் 1943ல் வங்காளத்தில் பெரும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டபோது, மூர்க்கத்தனமாக உதவி செய்ய மறுத்தார் என்பதை மதுஸ்ரீ தன் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பட்டினிச் சாவுகள் மிகவும் கொடுமையானவை. உண்மையில் உணவு போதாததால் மட்டுமோ, அடுத்த விளைச்சல் சரியாக நடக்காததினால் மட்டுமோ மக்கள் சாகவில்லை. உனவு போதாமல் போனதற்குக் காரணம் பிரிட்டிஷ் ராணுவம்.

சர்ச்சிலின் அரசு வங்காளத்தில் இருந்த எல்லா கோதுமையையும் தன் ராணுவத்துக்கு வாங்கி முடக்கத் தொடங்கியது. இதனால் வெளி மார்க்கெட்டில் அரிசி உடபட எல்லா தானியங்களின் விலைகளும் ஏறின. பர்மாவிலிருந்து அரிசி வருவது வழக்கம். அதை வரவிடாமல் சர்ச்சிலின் அரசு செய்துவிட்டது. ஜப்பானியர்கள் பர்மா வழியே நுழைந்தால், அவர்கள் வசம் ஒரு படகு, மாட்டு வண்டி, யானை, கார் எதுவும் கிடைக்கக் கூடாதென்று முன்கூட்டியே வங்க பர்மா எல்லைகளில் இருந்த எல்லாவிதமான வாகன வசதிகளையும் அங்கிருந்த அரிசியையும் கூட பிரிட்டிஷ் ராணுவம் கைப்பற்றிவிட்டது. இந்த படகுகளிலும் வண்டிகளிலும்தான் பர்மாவிலிருந்து அரிசி வரவேண்டும். அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

தனியார் சரக்குக் கப்பலகள் முதல் ராணுவக் கப்பலகள் வரை இந்தியப் பெருங்கடலைல் இருந்த எல்லா கப்பலகளையும் ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை வரவழைத்து வங்காளத்துக்குத் தரும்படி வைசிராய் லின்லித்கோ சர்ச்சிலைக் கேட்டார். சர்ச்சில் மறுத்துவிட்டார். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகிகள் அமெரி, வேவல் ஆகியோரும் சர்ச்சிலுக்கு இங்கிருக்கும் மோசமான நிலையைத் தெரிவித்து உடனே உணவு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கேட்டார்கள்.

“பஞ்சத்தால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எப்படி காந்தி மட்டும் இன்னமும் சாகாமல் இருக்கிறார் ?” என்று சர்ச்சில் பதில் தந்தி அனுப்பினார். காந்தி, பாவம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடங்கியது முதல் 1944 வரை சிறையில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவும் கனடாவும் உணவு அனுப்பத் தயாராக இருந்தபோதும் சர்ச்சில் அதற்குக் கப்பலகள் தர மறுத்துவிட்டார். எல்லா கப்பல்களும் யுத்தத்துக்கக தேவைப்படுவதாக அவர் சொன்னார். உண்மையில் அமேரிக்கக் கப்பலகள் முதல் எல்லாமே அப்போது சர்ச்சில் அரசின் கீழ்தான் இருந்தன. உணவுக் கப்பல்களையெல்லாம் பிரிட்டனுக்கு ராணுவத்துக்கு தானியங்கள் எடுத்துச் செல்லவும் , யுத்தம் முடிந்த பிறகு கிரீசிலும் ஐரோப்பாவிலும் தேவைப்படக் கூடிய உணவுகளை ஸ்டாக் செய்வதற்கும் சர்ச்சில் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்தியாவுக்கு அனுப்பப் போதுமான கப்பலகள் இருந்தன என்பதை அப்போதைய கப்பல் நடமாட்ட ரிகார்டுகளிலிருந்து மதுஸ்ரீ அமபலப்படுத்தியிருக்கிறார்.

உனவு தானியக் கப்பல்கள் வங்கத்துக்கு வருவதாகத் தெரிந்தாலே, உள்ளூரில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பொருளை வெளியே விட்டு விலைகள் விழ ஆரம்பிக்கும் என்று இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகிகள் சர்ச்சில் அமைச்சரவைக்குச் சொன்னதை சர்ச்சில் கண்டுகொள்ளவே இல்லை. ஜப்பான் வசம் பர்மா இருந்தபோதும் வங்கத்துக்கு அரிசி அனுப்ப ஏற்பாடு செய்ய தான் தயார் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறிவித்தார். அந்த செய்தியையே வெளியிடக் கூடாது என்று சர்ச்சில் அரசு சென்சார் செய்துவிட்டது.

விளைவாக வங்காளத்தின் கிராமங்களிலெல்லாம் மக்கள் உணவு இல்லாமல் பட்டினியில் தினசரி 5000, 6000 பேஎர் என்று தெருக்களில் செத்து விழுந்துகொண்டிருந்தார்கள். அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரைப் பிச்சையாகக் கேட்டு கொல்கத்தா நகர வீதிகளில் நுழைந்த கிராம மக்கள் பெரிய பெரிய ஓட்டல்களின் வாசலில் செத்து விழுந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவெங்கும், தமிழ்நாடு உடபட, பெரியதும் சிறியதுமாக சுமார் 40 பஞ்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லாமே பிரிட்டிஷ் சுரண்டலினால் ஏற்பட்டவைதான். மழை பொய்த்ததால் ஏற்பட்ட இழப்பைக் கூட ஈடு செய்ய அரசிடம் தானியங்கள் இருந்தன. ஆனால் பதுக்கல்காரர்கள் விலையை ஏற்ற அனுமதித்தது. பெரும் பணம் இருந்தவர்கள் மட்டும் தப்பினார்கள். ஏழைகள் ஈசல் போல செத்து விழுந்தார்கள்.

வங்கத்தில் மக்கள் செத்து விழுந்தபோது கூட இந்தியாவிலிருந்து கோதுமையையும் அரிசியையும் பிரிட்டன் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. ஆறு லட்சம் டன் தானியங்கள் தேவை என்று வைசிராய் கேட்டார். சர்ச்சில் அரசு கடைசியில் கொடுத்தது வெறும் 30 ஆயிரம் டன்தான். ஆனால் 71 ஆயிரம் டன் அரிசியை இலங்கையில் ரப்பர் தோட்டங்களுக்கு அனுப்பிற்று.

ஏழாண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு மதுஸ்ரீ இந்த நூலை எழுதியிருக்கிறார். முக்கியமான விஷயம், சர்ச்சில் அரசுக்கு எதிராக அவருக்குக் கிடைத்த ஆவணங்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்துதான். இதுதான் நமக்கு அவர்களுக்கும் உள்ள முக்கியமான வித்யாசம். இன்னும் கூட நெருக்கடி நிலை பற்றிய ஆவணங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சம காலத்திலேயே பல ஆவணங்களை திருத்தியும் மறைத்தும் வைக்கும் பழக்கம் நம் நிர்வாகங்களுக்கு இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால் மறுப்பதற்கும் திரிப்பதற்கும் தயார் நிலையில் இருக்கிறது நிர்வாகம். இந்தச் சூழ்நிலையில் இன்றைய பல அவலங்களை நாளைய வரலாற்றாசிரியர்கள் தோண்டியெடுக்கக் கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

அப்போது இன்னொரு ஹிட்லர் என்று நாம் அழைக்க வேண்டியவர்களையெல்லாம், இன்னொரு காந்தி என்று அழைப்பதற்கு மட்டுமே கூட ஆவணங்களைத் தயார் செய்துவைத்துவிட்டுப் போகும் ஆபத்து இருக்கிறது !


Thanks : www.gnani.net

தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்..

பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.





இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 2.9 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.




அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.

இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.

இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது

அவமானம்

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.

கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”

இன்றைய பெண்

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட் ச் செலவும் , நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!

ஐ..டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான்

கேள்வி : ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான். என்னைப் போன்றோருக்கு தாங்கள் தரும் அறிவுரை?

பதில் :

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

வெளிநாட்டுப் பணம் வரலாம்… வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்… இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது… சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

‘இன்று போலவே என்றும் சம்பளம் வரும்’ என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள்.

அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள். வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு… உறவினர்களை- அம்மா- அப்பாவை, ”என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்… ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!” என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள்.

பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி… அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்… அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

-நன்றி :

விகடன்(இந்த நல்ல விசயத்தை வெளியிட்டதற்கு)

http://priyatamil.wordpress.com/category/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/

அடிமையாக்க ஆசைப்படாதே

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

பிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.




மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.



யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.



திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்

- பாலகுமாரன்

நன்றி : தினமலர்

தஞ்சை கோவில் சென்டிமென்ட்: மாற்று வழியாக செல்ல பணி தீவிரம்

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழாவில், முதல்வர் உட்பட வி.ஐ.பி.,க்கள், சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே வர வழி அமைக்கப்படுகிறது. இதற்காக, சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, பூங்கா செடிகள் அழிக்கப்படுகின்றன.

தஞ்சை பெரியகோவில் 1,000வது ஆண்டு விழா, வரும் 22 முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் பல்கலையில் 24ம் தேதி, முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் ஆய்வரங்கமும், 26ம் தேதி மாலை, ஆயுதப்படை மைதானத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவும் நடக்கிறது. பதவி, ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, பெரிய கோவிலின் பிரதான வாயிலான கேரளந்தான் வாயில் வழியாக, வி.ஐ.பி.,க்கள் எவரும் வந்து செல்வதை விரும்புவதில்லை. இந்திரா காந்தி, சங்கர்தயாள் சர்மா, எம்.ஜி.ஆர்., உட்பட பலரை, இதற்கு சாட்சியாகக் கூறுவர். பெரிய கோவில் தீ விபத்து சமயத்தில், ஜி.கே.மூப்பனார் பிரதான வாயிலை தவிர்த்தார். முதல்வர் கருணாநிதி, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து, அதே வழியில் திரும்பினார். முதல்வர் உட்பட வி.ஐ.பி.,க்கள் பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே செல்ல ஏற்பாடு நடக்கிறது.

அதற்காக சிவகங்கை பூங்கா நுழைவாயிலில் இருந்து தளம் அமைத்தல், பெரிய கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள சுவரை அகற்றி பாதை அமைத்தல், அவ்வழியில் உள்ள பூங்காவில் செடி அகற்றுதல் போன்ற பணி நடக்கிறது. இவர்கள், சிவகங்கை பூங்கா வழியாக நுழைந்து, மகா வராகி சன்னிதி மற்றும் தொல்லியல் ஆய்வுத்துறை கண்காட்சியகத்துக்கு அருகிலுள்ள வாயில் வழியாக உள்ளே நுழைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய கோவில் வளாகத்தில், ஒரு சிறிய கல்லை நகர்த்தி வைக்கக்கூட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அனுமதி பெற்றே செய்யப்படும். பெரிய கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வோர் மத்தியில் இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது

சீனாவின் நவீன ஸ்ட்ரட்லிங் பஸ்

போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது ‘ஸ்ட்ரட்லிங் பஸ்’ என அழைக்கப்படுகின்றது.

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச ‘ஐ-டெக் எக்ஸ்போ’ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்

வீடியோ
-----------



நன்றி : ithayapoomi

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.



குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

Source : Dinamalar

National id Card

Nilekani is set to give Indians an identity

Packed into what look like two medium-sized suitcases are eight essentials -- an iris scanner, a fingerprint machine, a camera, a laptop, a computer screen linked to the laptop, an Internet data card, a pen drive and a printer
Armed with kits like these, Nandan Nilekani and his team at the Unique Identification Authority of India (UIDAI) will kickstart one of the most ambitious exercises in recent times -- distribution of unique identification numbers to India's 1.2 billion people.

And they hope to roll this out as early as the first week of September, in cities, towns and villages of Andhra Pradesh, the state chosen for the launch of this unique exercise.

Unlike in the Census that's already on, there will be no paper-wielding government employees knocking at doors. Instead, enrolment officials, who are almost certainly not going to be government employees, will set up stations in different parts of Andhra Pradesh and turn to their kits.

The laptop contains a bilingual software (English and the local language) that runs the whole ID process. The software links to the iris machine, fingerprint machine and the camera, recording biometric data and a photograph. The second computer screen is purely for the client who, in the interest of complete transparency, can watch exactly what is being recorded.

The software contains a transliteration device so that data entries like names and addresses need be typed in only one language. There is automatic translation to the other language. That translation can be manually overridden if there is a problem, with spelling for example. Eventually, the data will be transmitted to the UIDAI database via the Internet where there will be a de-duplication process after which an unique ID number will be issued. The client will get a printout of the details at the end of the process.

Well aware of possible glitches, technical and human, Nilekani is non-committal on a precise date for the rollout. But the people of Andhra Pradesh may have their first contact early next month.

Given the country's IT expertise, should such a project have been conceived many years ago? "Not really. The availability of this technology at an affordable price is a relatively recent phenomenon. In that sense, the timing is perfect," Nilekani told The Sunday Express.

But just having the right technology is not sufficient to roll out a project on this scale. "What we need to do is create an appropriate ecosystem," said Nilekani. In short, getting the incentives right for all those involved in the project.

According to Nilekani, a four-tier structure will govern the actual handing out of UID numbers. At the Centre, the UIDAI will be responsible for coordinating the whole exercise. It will certify technology used across the country, and will hand out numbers from its centralised database. Operationally, state governments will take charge and, therefore, have ownership of the project on the ground.

The state governments will work with authorised registrars (agencies of the state government or banks or even insurance companies) who actually need the UID data for a particular purpose. At level four will be the enrolment agencies (can be either privately or publicly owned) that will collect the data. Currently, the UIDAI has empanelled 220 enrolment agencies across the country.



Source: Indian Express and MSN

பூணூல் பிராமணர்களின் உரிமையா?

இந்த கேள்வியை அவ்வப்போது இணையத்தில் பார்க்கிறேன். பூணூல் ஜாதி அடக்குமுறையின் சின்னம், அதை அணிவது தான் உயர்ந்த ஜாதி, சூத்திரர்களின் பிறப்பு கேள்விக்குரியது என்பதைத்தான் சுட்டுகிறது, அப்படி பிராமணர்கள் நினைக்கவில்லை என்றால் அதை என் இன்னும் போட்டுக்கொண்டு அலைகிறார்கள், தூக்கி கடாச வேண்டியதுதானே என்று குமுறுவதை வினவு தளம் மாதிரி இடங்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கலாம்.

பூணூல் போடுவது தவறில்லை என்று வாதிடுபவர்கள் அடிக்கடி சொல்வது செட்டியார்கள், ஆசாரிகள் மற்றும் சில ஜாதியினரும் பூணூல் போட உரிமை உள்ளவர்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலோர் மனதில் பூணூல் என்றால் பிராமணர்கள்தான்; வேறு யாரும் இல்லை. ஆசாரிகள் பூணூல் போடுவது அவர்களின் ஜாதி மேட்டிமைத்தனம் என்று யாரும் நினைப்பதில்லை. பாரதியார் தலித் கனகலிங்கத்துக்கு பூணூல் போட்டாராம். சரி பூனூல்தான் போட்டாயிற்றே, கனகலிங்கம் இனி மேல் பிராமணன் என்று பாரதியும் வ.வே.சு. ஐயரும், வ.ரா.வும், மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் கனகலிங்கத்துடன் சம்பந்தம் பேசவில்லை. பிராமண ஜாதியில் பிறந்தவர்களுக்கே பூணூல்; அவர்கள் உடலில் பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பிராமணர்களே; மற்றவர்கள் ரங்கநாதன் தெருவில் வாங்கிப் போட்டுக்கொண்டாலும் சரி, பாரதி போட்டுவிட்டாலும் சரி, இல்லை பரம்பரை பரம்பரையாக ஆசாரிகள் மாதிரி போட்டாலும் சரி, அவர்கள் பிராமணர்கள் மாதிரி “உயர்” ஜாதியினர் இல்லை – அதனால்தான் ஜாதி மேட்டிமைத்தனத்தின் குறியீடு என்றுதான் பூணூலை பலரும் கருதுகிறார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் கேள்வியே தவறானது. பூணூல் பிராமணர்களின் உரிமையா இல்லையா என்பது பிரச்சினையே இல்லை. ஒருவர் உடலில் என்ன அணியலாம் என்பதை தீர்மானிக்க அடுத்தவருக்கு உரிமை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி.

பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது, அப்படி அணியும் பூணூல் அறுக்கப்பட வேண்டும், ஏனென்றால் பூணூல் ஜாதியின் சின்னம், நாங்கள் ஜாதி அழிக்கப்பட வேண்டியது என்று உறுதியாக நம்புகிறோம் என்று சொன்னால்; ஒருவர் உடலில் என்ன இருக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லை, அவர் வாழும் சமூகத்துக்குத்தான் இருக்கிறது என்ற இந்த கோட்பாட்டை அனுமதித்தால்; அப்புறம் எப்படி தோள் சீலை அணியக் கூடாது என்ற அன்றைய சமூக அடக்குமுறையை மறுப்பது? சானியா மிர்சா குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்று சொல்லும் முல்லாவை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்ப்பது? தொப்புளில் வளையம் ஆபாசம் என்று உறுதியாக எண்ணும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வளையத்தை பிடுங்கிப் போடும் உரிமை உண்டா?

ரொம்ப சிம்பிளான விஷயம். என் உடலில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த விதி செல்லாமல் போகும் இடம் ஒன்றுதான் – என் உடலில் இருக்கும் பொருள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைக்கக்கூடும் என்றால்; (இடுப்பில் தற்கொலை பெல்ட்டுடன் விமானத்தில் ஏறக்கூடாது; வாயில் புகையும் சிகரெட்டுடன் ரோடில் போகாதே etc.) இந்த தீங்கு tangible ஆக இருக்க வேண்டும். என் மனம் புண்படுகிறது மாதிரி intangible effects என்றால் நானே புண்பட்டுக் கொள்ள வேண்டியதுதான், நானே மருந்து போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஹுசேனின் ஓவியங்கள் பதிவில் மனம் புண்படுவதைப் பற்றி எழுதியவை இங்கும் பொருந்தும்.

பூணூல் பிராமணர்களின் உரிமையா இல்லையா என்பது எனக்கு அனாவசியம். யார் உடலில் என்ன இருக்க வேண்டும் (அது அடுத்தவரை நேரடியாக பாதிக்காத வரையில்) என்று தீர்மானிக்க நீங்கள் யார் என்பதுதான் கேள்வி. என் உடலில் பூணூல் இருக்கிறது, எனக்கு மட்டும்தான் பூணூல் போட உரிமை இருக்கிறது, ஏனென்றால்/அதனால் நான் உயர்ந்தவன், மற்றவர் எல்லாம் தாழ்ந்தவர் என்று சொன்னாலொழிய பூணூலைப் பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. என் உடலில் நான் பூணூல் அணிவதும், தாயத்து கட்டுவதும், குல்லா போடுவதும். முண்டாசு கட்டுவதும், தாலி அணிவதும், பான்ட் மேலே ஜட்டி போடுவதும், ஜட்டி மேலே பான்ட் போடுவதும் என் தனி மனித உரிமை. அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கலாம், அவ்வளவுதான். வேண்டுகோளை நிறைவேற்றுவதும், போடா போ என்பதும் என் இஷ்டம், என் உரிமை.

பதிவின் கருத்தை விட்டுவிட்டு பார்ப்பன சதி, மனு ஸ்ம்ரிதி, சூத்திரனை இழிபிறப்பு என்று சொல்கிறான் என்று எங்கேயோ போகும் மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.

Source ;
koottanchoru

கிறித்துவ பயங்கரவாதம்...

இந்துத்வா மற்றும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தால் பீடித்துள்ள இந்தியாவை கிறித்துவ பயங்கரவாதம் துவம்சம் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது ஆயுதம் ஏந்தா பயங்கரவாதம். பயங்கரவாதம் போல் தெரியாத பயங்கரவாதம். ஆயுததாரிகள் செய்யும் அதே காரியம். ஆயுததாரிகளை விட ஆபத்தான கபடதாரிகள் செய்யும் ஊழியம்.

அந்த நற்செய்தி கூட்டத்தில் இந்த கெட்ட செய்தி தான் காதில் விழுந்தது. "இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவோம். இந்தியாவை இயேசுமயமாக்குவோம்" என்கிற ரீதியில் அந்த கெட்ட செய்தி காதில் விழுகிறது. பல மதத்தவர் வாழும் ஒரு தேசத்தில் "இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவோம்" என்றால் என்ன அர்த்தம்.

ஏனைய மதத்தவரை சீண்டி, போலியான மத மோதலை தூண்டி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதை தவிர
வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும். "உங்கள் கடவுள் உங்களுக்கு உயர்வென்றால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்"

கணிசமான பகுத்தறிவாளர்கள் வாழும் போதே, மதச்சார்ப்பின்மைக்கு எதிரான கருத்தை, மதச்சார்ப்பின்மைக்கு வேட்டு வைக்க கூடிய கருத்தை விதைக்கும் தைரியம் எப்படி வந்தது. சிறுபான்மை என்கிற அஸ்திரத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அசட்டு துணிச்சல் போலும். அந்தந்த மதத்தவர்கள், தங்கள் கடவுளுக்கே இந்த தேசத்தை காணிக்கையாக்குவோம் என்றால் அமைதி செத்து போகும்.

பகுத்தறிவாளர்களுக்கு தான் - இனி நிறைய வேலை உள்ளது இந்த கிறித்துவர்களிடம். சாதீய பேய், இந்து மதத்தில் இருந்து கூடு விட்டு கூடு பாய்வது போல் கிறித்துவத்திற்கு போய் உள்ளது. கிறித்துவதளமொன்றின் பெயரை பார்த்தாலே, சாதீயம் கிறித்துவத்தை பிடித்து எப்படி ஆட்டுகிறது என்பதை பார்க்கலாம். "கிறிஸ்தவ பிராமணாள்" என்பது அந்த வலைப்பூவின் பெயர்.

இதில் எத்தனை எத்தனை உள்நோக்கம் உள்ளதை யார் அறிவார். இது கிறிஸ்துவ பார்ப்பணியம். தாழ்த்தப்பட்டவர் நிலை மதம் மாறியும் தாழ்ந்துள்ள போது, பகுத்தறிவாளன் கேள்வி கேட்க நியாயம் உள்ளது. "எண்ணிக்கையை மட்டுமே உயர்த்த விரும்புகிறாய்.தாழ்ந்தவனை தாழ்ந்து வைத்து இருக்கவே விரும்புகிறாய்" சரி தானா. பிராமணியம் போகும் திசையை பார்த்து, போராடும் பொறுப்பு பகுத்தறிவுக்கு உள்ளது. சாதிகென்று தனித்தனியாக கிறித்துவ நிகழ்ச்சி நடத்தும் கொடுமையை அறிவிர்களா.

"இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவார்களாம்"... தான் பிறந்த நாட்டிலும் (இஸ்ரேல்) தான் வளர்ந்த நாட்டிலும் (பல அரபு நாட்டிலும்) காணாமல் போன கிறித்துவம், மேற்குலக நாடுகளில் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து,செத்து கொண்டு வரும் கிறித்துவம், இந்தியாவின் மதச்சார்ப்பின்மையை காவு கொடுக்க, அமைதியை கெடுக்க மேற்குலக நாடுகள் நிதியுதவிகளுடன், எதிர்காலத்தில் இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயலலாம். அது இப்போதே அங்காங்கே தெரிகிறது. பாகிஸ்தானின் ஆயுத உதவி செயலை போன்றதே, மேற்குலகத்தின் இந்த நிதி உதவி.

ஒரு தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான கருத்து, பல மதத்தவரையும் அவமானப்படுத்தும் மற்றும் சீண்டும் கருத்து - கிறிஸ்துவம் வெளிப்படுத்தும் கருத்துக்கள். அரசிற்கு மதச்சார்ப்பின்மையை காக்கின்ற மிக பெரிய பொறுப்பு உள்ளது. அதையும் விட மிக பெரிய பொறுப்பு, பகுத்தறிவுக்கு உள்ளது

Source : http://oosssai.blogspot.com/2010/08/blog-post_18.html

WINNER VERSUS LOSERS

The Winner is always part of the answer;
The Loser is always part of the problem.

The Winner always has a program;
The Loser always has an excuse.

The Winner says, "Let me do it for you";
The Loser says, "That is not my job."

The Winner sees an answer for every problem;
The Loser sees a problem for every answer.

The Winner says, "It may be difficult but it is possible";
The Loser says, "It may be possible but it is too difficult."

When a Winner makes a mistake, he says, "I was wrong";
When a Loser makes a mistake, he says, "It wasn't my fault."

A Winner makes commitments;
A Loser makes promises.

Winners have dreams;
Losers have schemes.

Winners say, "I must do something";
Losers say, "Something must be done."

Winners are a part of the team;
Losers are apart from the team.

Winners see the gain;
Losers see the pain.

Winners see possibilities;
Losers see problems.

Winners believe in win-win;
Losers believe for them to win someone has to lose.

Winners see the potential;
Losers see the past.

Winners are like a thermostat;
Losers are like thermometers.

Winners choose what they say;
Losers say what they choose.

Winners use hard arguments but soft words;
Losers use soft arguments but hard words.

Winners stand firm on values but compromise on petty things;
Losers stand firm on petty things but compromise on values.

Winners follow the philosophy of empathy: "Don't do to others what you would not want them to do to you";
Losers follow the philosophy, "Do it to others before they do it to you."

Winners make it happen;
Losers let it happen.

Winners plan and prepare to win.
The key word is preparation.

கிறிஸ்தவர்களின் கல்லறையில் தீண்டாமை

திருச்சியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர் ஹவுஸ் கல்லறைத் தோட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களும், அந்த நகரில் கணிசமாக வாழும் பிள்ளை சமூகத்து கிறிஸ்தவர்களும் இரு வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றனர்.
இதை உறுதிப் படுத்தும் வகையில் கல்லறையின் நடுவே ஒரு குறுக்கு சுவர் கட்டுப்பட்டுள்ளது.

இந்த பாகுபாட்டை அகற்ற பெரியார் 1950களிலேயே கோரிக்கை விடுத்தும் இந்த சுவர் இன்னமும் அகற்றப்படவில்லை என்று சுட்டிக் காட்டும் பெரியார் திரவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், இதை தடுக்கத் தவறிய காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவினரைக் கண்டித்து போராடப் போவதாக கூறுகிறார்.

தலித் கிறிஸ்தவர்கள் புறந்தள்ளப்படுவதாகக் கூறி சமீப காலங்களில் தேவாலயத்துக்குள்ளேயே கலகக் குரல்கள் எழுந்துள்ளன. அனைவரும் சமம் என்பது தான் தேவாலயத்தின் அதிகாரபூர்வ நிலையாக உள்ளது.


சாதிப் பிரிவினையை கிறிஸ்தவம் ஏற்கவில்லை


சாதி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சுவரை தேவாலயம் ஏற்கவில்லை என்று தமிழோசையிடம் தெரிவித்த கத்தோலிக்கப் பாதிரியாரும் தமிழக அரசின் சிறுபான்மையினர் நல வாரியத்தின் தலைவருமான அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை, இந்தியாவில் உள்ள சில சமூக சூழல்களை புறம்தள்ள முடியாமல் கிறிஸ்தவம் இருப்பதாகக் கூறினார்.

திருச்சியில் உள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது என்றும் அதனால்தான் அந்த சுவரை அகற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். அதே சமயம் இந்த கல்லறையில் ‘கல்லறைத் திருநாள் விழா’ ஆயரால் நடத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கல்லறையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. ஆயர்களுக்கு கீழ் வரக்கூடிய பிற குருக்கள் இந்த மரணச் சடங்குகளில் கலந்து கொள்கிறார்கள் என்பதை அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை ஒத்துக் கொள்கிறார்.

தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு திருச்சபையில் நீதி கிடைக்கவில்லை என்கிறார் கத்தோலிக பாதிரியாரும், தலித் கிறிஸ்தவ செயற்பாட்டாளருமான யேசு மரியான்.

சம்மந்தப்பட்ட நிலம் தனியாருடையதாக இருந்தாலும், அந்த நிலம் ஆயரால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு அதை நிர்வகிக்கும் பொறுப்பு திருச்சபையுடையது என்று கூறும் யேசு மரியான், கிறிஸ்தவ நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு சமீப காலங்களாக இடங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

Source : BBC Tamil
Link : http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/100814_cemetrycristians.shtml