Showing posts with label சின்ன கருணாநிதி. Show all posts
Showing posts with label சின்ன கருணாநிதி. Show all posts

சின்ன கருணாநிதி

சென்னை நூறடி சாலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போது அபகரித்த ஒரு கட்டிடத்தில் சிறுத்தைகள் அலுவலகம் வைத்து நடத்தி வந்து கொண்டிருந்தேன். திடீரென்று நீதிமன்றம் அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட போது, கட்டப் பஞ்சாயத்து செய்து அபகரித்த இடமாயிற்றே என்று கொஞ்சமாவது தயங்கினேனா ? மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெற வேண்டும் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த இடம் கை விட்டுப் போய் விடக் கூடாது என்றும் எத்தனை முறை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியிருப்பேன். ?
ஒரே ஒரு காடுவெட்டி குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியே உடைந்தது.
விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டங்களின் போது கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட 16 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை போட்டு, அன்னை சோனியாவை திருப்தி படுத்தினீர்களே ? ஏதாவது கேட்டேனா ? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த அந்த 16 பேரின் குடும்பங்கள் என்ன ஆயிற்று என்று கவலைதான் பட்டிருப்பேனா ?
நான் எப்போதும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது என்னுடன் கடற்கரையில் கலந்து ஆலோசிக்கும் எனது பல ஆண்டு கால நெருங்கிய நண்பர் என்னை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போகச் சொல்லியும் கூட, ஜெயலலிதாவை விட மோசமான தமிழினத் துரோகி நீங்கள் தான், அதனால் உங்களுடன் தான் கூட்டணி என்று இறுதி முடிவு எடுக்கவில்லை ? அதனால் அந்த நண்பர் இன்று வரை என்னடன் பேசவில்லை என்றாலும் கூட, நான் என்ன நட்பை இழந்ததற்காக கவலைப் பட்டேனா ?
அந்த நண்பரை விட, என்னை உங்களோடு இணைத்து வைத்த ஆருயிர் நண்பர் காமராஜ் தானே இப்போது எனக்கு முக்கியமாக இருக்கிறார் ? காமராஜோடு நட்பாக இருப்பதை விடவும், எனக்கு உங்கள் வாரிசாக இருக்க வேறு என்ன தகுதி வேண்டும் ?
பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுக்க பட்ட போது நான் ஒரு இடத்தின் நின்றேன். இன்னோரு இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆரம்பகாலம் முதல் என்னோடு உழைத்து இயக்கத்துக்காக பாடு பட்டவர்களுக்கா கொடுத்தேன் ? வேலாயுதம் என்ற மோசடி பேர்விழிக்குத் தானே கொடுத்தேன் ?
தலித் சமுதாயத்திற்காக பாடு படுகிறேன் என்று அரசியலுக்கு வந்து விட்டு உங்களைப் போலவே சினிமாவில் நடிக்கிறேன் என்று சில காலங்கள் கூத்தடித்துக் கொண்டிருக்கவில்லையா நான் ?
நீங்கள் நினைத்திருந்தால் எனக்கு ஒரு துணை அமைச்சர் பதவியையாவது வாங்கித் தந்திருக்க முடியும் என்றாலும், நீங்கள் மாற்றான் வீட்டுப் பிள்ளை போல என்னை கண்டு கொள்ளாமல் இருந்தும், ஒரு முறையாவது ரோஷப் பட்டுக் கேட்டிருப்பேனா உங்களிடம் ? தலைவர் கொடுத்தார். நான்தான் வேண்டாம் என்று விட்டேன் என்றல்லவா ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிகிறேன்.
தலித்துகளுக்கு இதயத்தில் இடம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் கட்டுக் கதையை நம்பிக் கொண்டு, தலித் சமுதாயத்தினருக்கு உங்கள் அரசு இழைக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கவில்லையா நான் ?
இப்போத பணி இடை நீக்கம் செய்யப் பட்டிருக்கும் உமாசங்கர் தலித்தாக இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தலித் அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக திரண்டுள்ள நிலையில், இன்று வரை ஒரு வார்த்தை பேசியிருப்பேனா நான் ?
இப்போது சொல்லுங்கள். உங்கள் வாரிசாக என்னை விட தகுதியானவன் யார். அதனால், எனது பிறந்த நாளான இன்று முதல், என்னை “சின்னக் கருணாநிதி“ என்று அழைக்குமாறு உங்கள் கழக உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்டீர்கள் என்றால், இதை விட எனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.


Source : http://www.savukku.net/