அப்பா .... அப்பா ... அப்பா

அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...

இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ தியேட்டர் சுவரை மீறி செலவழித்தேன்

அப்பா! நான் கேட்கத் தயங்குவேனெனத்
தெரிந்து எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால் நான் அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!
நீ கோடையில் நின்றாலும் –
எனக்கு குடை வாங்கிக் கொடுத்தாய்...
உன் வியர்வை விற்ற காசில் –
எனக்கு குளிர்சாதனப் பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சி தான் –
எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தது...
நீ மிதித்த சுவடுகள் சைக்கிள்
பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான் அதிகமாய்
பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ..
.வேலை தேடிய எனக்கு நீ
பணம் அனுப்பினாயே ?

இப்படி இதய தேசத்தில்
உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!
உன் பாக்கெட்டில் பணம் திருடியது
நான் தான் என தெரிந்தும் ...
இதுவரை எனைக் காட்டிக் கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய் நீ செய்த பாசாங்கு!
இது போல கடிதம் சுமக்காத பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........என்னுள்ளும் .........
நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும் நம்மைப் பிரித்துவிடக் கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!

-ரசிகவ் ஞானியார்

நீ எனக்கு வேண்டாமடி

சைனாவுக்கு போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர் சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


மு.வ உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.



சாலமன் பாப்பையா உரை:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க

கலைஞர் உரை:
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்


விளக்க உரை

கற்க - நல்ல கற்க வேண்டும் . கல்வி அனைவருக்கும் அவசியம் அதனால் கற்க வேண்டும் .

கசடற - சந்தேகங்களை களைத்து அல்லது சந்தேகங்கள் இல்லாமல் தெளிவாக முழுமையாக கற்க வேண்டும். சந்தேகங்களோடு கற்றால் அந்த கல்வி வீண் . ஆகையால் சந்தேகங்கள் இல்லாமல் கற்க வேண்டும்.

கற்பவை கற்றபின் - கற்க வேண்டியவைகளை கற்க வேண்டும். இந்த நேரத்தில் எதை கற்க வேண்டுமோ அதை கற்க வேண்டும் .

நிற்க அதற்குத் தக - படித்த பின் படித்துக்கு கருத்துக்கு ஏறார் போல் வாழ வேண்டும் அல்லது படித்த கருத்தை அல்லது செயலை பயன்படுத்தி பார்க்க வேண்டும் .

ஆறு வயது ஐன்ஸ்டீன்!




அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியச் சிறுவன் ஒருவன் ஐன்ஸ்டீனை விட அறிவுஜீவியாக திகழ்கிறான்.
பிரணவ் வீராவுக்கு வயது ஆறுதான். ஆனால் ஐ,க்யூ.,வோ 176! ஐன்ஸ்டீனுக்கு ஐ.க்யூ., அளவு 160 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
சிக்காகோ நகரில் வசித்துவரும் பிரணவ்வின் வாயில் அமெரிக்க அதிபர்கள அத்தனை பேரும் வந்து போகிறார்கள். ஏ,பி,சி,டி, யை இசட்டில் இருந்து தலைகீழாக தப்பாமல் சொல்கிறான். 2000ஆம் ஆண்டிற்கு முன்பாக ஏதோ ஒரு தேதியைச் சொன்னால், அது எந்தக் கிழமையில் வந்தது என அடுத்த நொடியில் சொல்லிவிடுகிறான். விடியோ கேம்களில் காட்டும் வேகத்தை வெளி விளையாட்டிலும் பிரணவ் காட்டுவதுதான் அதிசம் என்கிறார்கள்.
பிரணவ் நாலரை வயது குழந்தையாக இருக்கும் போது ஏ,பி,சி,டி, எழுத்துக்கள் கொண்ட பிளாக்குகளோடு விளையாடும் போதே அவனுடைய அறிவுத்திறன் பளிச்சிட்டதாக அவனுடைய பெற்றோர்கள் சொல்கிறார்கள். ஆல்பபெட் செட்களில் எந்தெந்த எழுத்துக்கள் ஒரே நிறத்தை கொண்டவை என்று பளிச்சென சொல்வானாம்.
”ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு ஆல்பபெட் செட்களின் மீது தனி ஆர்வம் இருந்துவருகிறது. பல்வேறு நிறங்களில், பல்வேறு அளவுகளில், பல்வேறு உலோகங்களிலான ஆல்பபெட் செட்களை அவன் சேர்த்து வருகிறான் என்ற பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள் பிரணவ்வின் பெற்றோர்களான பிரசாத் வீராவும், சுசீத்ரா வீராவும்.
பிரணவ் அவன் வயது ஒத்த குழந்தைகளைவிட படு ஷார்ப்பாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் அவனுடைய ஐ.க்யூ., அளவை அளக்க முடிவு செய்தனர். அதன்படி ஹைட் பார்க் என்ற இடத்தில் உள்ள பவர் எஜூகேஷனல் சர்வீசஸ் என்ற அமைப்புக்குச் சென்று பிரணவ்வின் ஐ.க்யூ., வை பரிசோதித்தனர்.
அந்தச் சோதனையில் தான் பிரணவ், 176 என்கிற அளவுக்கு ஐ.க்யூ., சக்தி படைத்தவன் என்பது தெரியவந்தது.
பிரணவ்விற்கு கல்விப் புகட்டும் மெக்கார்மிக் எலிமெண்ட்ரி பள்ளியின் ஆசிரியர் மார்சி டெய்லர் பிரணவ்வை அதிசயக் குழந்தை என்கிறார்.
”மற்ற குழந்தைகள் அறியாதவற்றையெல்லாம் அறிந்துகொள்வதும், அதை பகிர்ந்துகொள்வதும் பிரணவ்க்கே மிக்க சந்தோஷத்தைத் தருகிறது” என்கிறார் தாயார் சுசீத்ரா. அது சரி பிரணவ், உனக்க என்னவாக ஆசை என்று கேட்டால், ”விண்வெளி ஆராய்ச்சியாளனாகப் போகிறேன்” டாண் என்று சொல்கிறான் பிரணவ்.

Swiss Banking Association report, 2006


Revelation on Swiss Bank Accounts

India has more money in Swiss banks than all the other countries combined!!!!This is so shocking . . . . . wish black money deposits was an Olympicsevent . . . .. .The second best Russia has 4 times lesser deposit. US is not even there inthe counting in top five !!

Recently, due to international pressure, Swiss govt. agreed to disclose thenames of the account holders only if the respective govts formally asked for it. Indian govt. is not asking for the details .No marks for guessing why ????

We need to start a movement to pressurize the Indian govt. to do so !! This is perhaps the only way, and a golden opportunity, to expose the highand mighty and weed out corruption !!Is India poor, who says? Ask Swiss banks With personal accunt deposit bankof $1500 billion in foreign reserve which have been misappropriated, anamount 13 times larger than the country's foreign debt, one needs torethink if India is a poor country?.

DISHONEST INDUSTRIALISTS, scandalous politicians and corrupt IAS, IRS, IPSofficers have deposited in foreign banks in their illegal personal accountsa sum of about $ 1500 billion, which have been misappropriated by them.This amount is about 13 times larger than the country's foreign debt. Withthis amount 45 crore poor people can get Rs 1,00,000 each.

This huge amount has been appropriated from the people of India byexploiting and betraying them.Once this huge amount of black money & property comes back to India , theentire foreign debt can be repaid in 24 hours. After paying the entireforeign debt, we will have surplus amount, almost 12 times larger than theforeign debt. If this surplus amount is invested in earning interest, theamount of interest will be more than the annual budget of the Centralgovernment. So even if all the taxes are abolished, then also the Centralgovernment will be able to maintain the country very comfortably..

Some 80,000 people travel to Switzerland every year, of whom 25,000 travelvery frequently.. 'Obviously, these people won't be tourists..

They must be travelling there for some other reason,' believes an officialinvolved in tracking illegal money. And, clearly, he isn't referring to thecommerce ministry bureaucrats who've been flitting in and out of Genevaever since the World Trade Organisation (WTO) negotiations went into atailspin!Just read the following details and note how these dishonestindustrialists, scandalous politicians, corrupt officers, cricketers, filmactors, illegal sex trade and protected wildlife operators, to name just afew, sucked this country's wealth and prosperity. This may be the pictureof deposits in Swiss banks only. What about other international banks?

Black money in Swiss banks -- Swiss Banking Association report, 2006details bank deposits in the territory of Switzerland by nationals offollowing countries :

Top Five countries:
1. India ---- $1,456 billion
2. Russia ---$ 470 billion
3. UK -------$390 billion
4. Ukraine - $100 billion

5. China -----$ 96 billion

Now do the maths - India with $1456 billion or $1.4 trillion has more moneyin Swiss banks than rest of the world combined.

Public loot since 1947: Can we bring back our money? It is one of thebiggest loots witnessed by mankind -- the loot of the Aam Aadmi (commonman) since 1947, by his brethren occupying public office.It has been orchestrated by politicians, bureaucrats and some businessmen..The list is almost all-encompassing.. No wonder, everyone in India lootswith impunity and without any fear. What is even more depressing in thatthis ill-gotten wealth of ours has been stashed away abroad into secretbank accounts located in some of the world's best known tax havens. And tothat extent the Indian economy has been stripped of its wealth.

Ordinary Indians may not be exactly aware of how such secret accountsoperate and what are the rules and regulations that go on to govern suchtax havens. However, one may well be aware of 'Swiss bank accounts,' theshorthand for murky dealings, secrecy and of course pilferage fromdeveloping countries into rich developed ones.
In fact, some finance experts and economists believe taxhavens to be aconspiracy of the western world against the poor countries. By allowing theproliferation of tax havens in the twentieth century, the western worldexplicitly encourages the movement of scarce capital from the developingcountries to the rich.

In March 2005, the Tax Justice Network (TJN) published a research findingdemonstrating that $11...5 trillion of personal wealth was held offshore byrich individuals across the globe. The findings estimated that a largeproportion of this wealth was managed from some 70 taxes havens.

Further, augmenting these studies of TJN, Raymond Baker-- in his widely celebrated book titled 'Capitalism' s Achilles Heel :Dirty Money and How to Renew the Free Market System' -- estimates that atleast $5 trillion have been shifted out of poorer countries to the Westsince the mid-1970..It is further estimated by experts that 1 % of the world's population holdsmore than 57 % of total global wealth, routing it invariably through thesetax havens. How much of this is from India is anybody's guess. What is tobe noted here is that most of the wealth of Indians parked in these taxhavens is illegitimate money acquired through corrupt means.

Naturally, the secrecy associated with the bank accounts in such places iscentral to the issue, not their low tax rates as the term 'tax havens'suggests. Remember Bofors and how India could not trace the ultimatebeneficiary of those transactions because of the secrecy associated withthese bank accounts?

LETS PUT OUR HEADS TOGETHER AND FIND A WAY TO BRING BACK THIS MONEY !!!THIS IS TO SAVE INDIA FOR EVERY INDIAN ?

ஈ வே ரா போராட்டத்தை பற்றி ஜீவா





பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.(சிரிப்பு)நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.(சிரிப்பு)இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ?(ஒரே சிரிப்பு)காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ? (சிரிப்பு)நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?(சிரிப்பு)குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ?(சிரிப்பு)ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ?(சிரிப்பு)பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ?எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.(நூல்: மேடையில் ஜீவா)

திருமணத்தை பற்றி பெரியார்





இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்– மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது... கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன? புருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து – திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். "நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா? "ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது? Periyar on கற்பு :நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

தமிழை பற்றி பெரியார்







தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?தமிழால் என்ன நன்மை?தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்குதமிழர்முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்குகாரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளைஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமேஎன்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்

நாகேஷ் ... நாகேஷ் ... நாகேஷ் ...

நாகேஷ் என்ற இன்னொரு நடிக இமயம் மறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் ஆளுமை செய்த ஒரு சிறந்த நடிகரைத் தமிழ்ப் படவுலகம் இழந்துவிட்டது.
ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவும் சிரிப்பை ஏற்படுத்துமெனில் அது நாகேஷை மட்டுமே சொல்லமுடியும்.. நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் , பிணம் எனக் கொடுக்கப் பட்ட பாத்திரமாகவே மாறிய தன்மை நாகேஷுக்கு உரியது.
நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்
வாழ்க்கையில் எதையாவது சாதிக்காமல் திரும்பி வரமாட்டேன் என்ற வெறியில் வீட்டைவிட்டு வெளியேறிவர் நாகேஷ். சென்னையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். [[தாமரைக்குளம் (திரைப்படம்)தாமரைக்குளம்] என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாநாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
திரையுலக மைல் கற்கள்!
நடிப்புலக ஜாம்பவான்கள் கூட சற்று அசந்தால் நாகேஷ் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் . ஒரு காலத்தில் நாகேஷ் திரையில் தோன்றினாலே அரங்கம் சிரிப்பில் வெடிக்கும். நகைச்சுவை பாத்திரங்களிலும் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவர் நடிப்புக்கு இணை அவர்தான். யதார்த்தமான நடிப்பு தமிழில் அவர்தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.
நீங்கள் திருவிளையாடல் பார்த்திருப்பீர்கள்.. பெரும்பாலும் நாகேஷ் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கென்று தனிப்பகுதி உண்டு.. தருமி எனும் வேடம். சிவனாக நடித்த சிவாஜியின் நடிப்பையே ஓரம் கட்டிவிடும் அளவுக்கு அப்படியொரு நடிப்பு.. எந்த நடிகர்திலகங்களும் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கும் உத்தி யாரிடம் உண்டோ, அவரே சிறந்த நடிகர் என்று சொல்லலாம்.. தருமி கேள்வி கேட்கும் காட்சி, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதும் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதில் அவர் கேட்டுக்கொண்டே முதுகை வளைத்து செல்வார் பாருங்கள்..... இனியொரு நாகேஷ் பிறந்துதான் வரவேண்டும்..
காதலிக்க நேரமில்லை, யில் பாலய்யாவோடு இணைந்து நடிக்கும் அந்த திகில் காட்சிகள்... ஒருமுறை இக்காட்சியைக் கண்டு கொண்டே தண்ணீர் குடித்த எனக்கு, குபீர் நகைச்சுவையால் பொறை ஏறி மூக்கை அடைத்துக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. அப்படத்தில் அவர் ஒரு புகைப்படம் கூட எடுக்கமாட்டார்.....
ஒரு ஸ்வீட்டஸ்ட் வில்லன்.... தில்லானா மோகனாம்பாளைச் சொல்லலாம்.. அந்த பாகவதர் கெட்டப், ரசிக்க வைக்கும் வில்லத்தனம்.... வைத்தி என்று பெயரை வைத்துக் கொண்டு மாமா வேலை பார்க்கும் குறுவில்லன்.. ஏன், அபூர்வ சகோதரர்களில் அவர் தன் வில்லத்தனமான நடிப்பை அப்பட்டமாகக் காண்பிக்கவில்லையா....
வயது எழுபதைத் தாண்டியாயிற்று, இனி என்ன நகைச்சுவை உணர்வைக் கிளப்ப இந்த கிழவனால் முடியும் என்று நினைக்கலாம். ஆனால், கமலும் நாகேஷும் இணைந்த கலவை இருக்கிறதே, அது இனிவரும் நகைச்சுவைக் கலைஞர்களால் முடியுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.. பஞ்சதந்திரத்தில் அவர் நடித்த காட்சிகள் அத்தனையும், டாப்..... அந்த கிழட்டு முகத்தில் தோன்றும் சிரிப்பே, அமைதி குடிகொண்டிருக்கும் கோவிலைப் போன்று இருக்கிறதா இல்லையா...
செய்கை காமெடி என்று சொல்வார்கள், அதாவது ஸ்லாப்ஸ்டிக் (Slapstick) அந்தவகை காமெடியில் இவரை அடித்துக் கொள்ள இந்தியாவிலேயே ஆளில்லை. மகளிர் மட்டும் எனும் படத்தில் பிணமாகவே நடித்திருப்பார்... என்னைக் கேட்டால், அப்படியொரு காட்சி தமிழ் திரைப்பட உலகில் வேறு எவரும் நடித்திராத நடிக்க முடியாத காட்சி..
சரி, நாகேஷ் என்ன, நகைச்சுவையாளர் மட்டும்தானா?
ரிதம், மின்னலே, அபூர்வராகங்கள், தீபம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் போன்ற படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பையும் காணலாம்.. என் நாகேஷ் நடித்த பழைய படங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சொல்லுவார், "இவருக்கு மட்டும் கொஞ்சம் நல்ல முகவெட்டு இருந்திருந்தா, சிவாஜியே காணாம போயிருப்பாரு" என்று.. உண்மைதான்.. சிவாஜி போன்ற ஒரு நடிப்புத் திறமைமிக்க கலைஞனோடு நாகேஷை ஒப்பிடுவதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் அருமையாக நடனமும் ஆடுவார்.
சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நவக்கிரகம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, சோப்பு சீப்பு கண்ணாடி, போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தன் திறமையை நிரூபித்தவர்... இதில் சுவாரசியம் என்னவென்றால், அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்... அதிலும், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்றவற்றில் தோல்வியைத் தாங்காமல் துடிக்கும் நடிப்பை முகத்திலேயே நிறுத்தியிருப்பார்.எதிர்நீச்சலில், தன்மானத்தைக் காப்பாற்றவும், அதேசமயம் வயிற்றை நிரப்பவும் அல்லல்படும் ஒருவனி நிலையை மிகத் துல்லியமாக முகபாவனைகளில் வெளிப்படுத்தியிருப்பார்..
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் அவரது படங்களில் நகைச்சுவை ஏற்படுத்தாத ஒரு படத்தை குறிப்பிட்டு சொல்லுங்கள்..... முடியாது.... அதேபோன்று, நாகேஷைப் போன்ற ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களே இன்று மிகக் குறைவு..
சொந்த சோகங்கள்…
திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், நாகேஷின் சொந்த வாழ்க்கை தனிமையில் சேகமாகவே கழிந்தது.
வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
புதிதாக வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு தன் தாயை சந்திக்க அவர் ஆசையுடன் சென்றார். ஆனால் அவரால் தாயை சந்திக்க முடியவில்லை. அவர் சென்ற போது அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்த நாகேஷ், மகனை பெரிய நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக மகன் ஆனந்தபாபுவை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால் தான் சேர்த்த பணத்தையெல்லாம் இழக்கும் படமாக அது அமைந்துவிட்டது.
பின்னர் சில படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அந்த வெற்றிகளை ஆனந்தபாபு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், போதைக்கு அடிமையாகி பாதை மாறிப்போனது நாகேஷுன் இதய நோயை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது.
நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்
எப்படி, ஜனவரி 30 தியாகிகளின் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறதோ, அதே போல, ஜனவரி 31 நகைச்சுவையாளர் திருநாளாகக் கொண்டாடப்படவேண்டும்..