திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


மு.வ உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.



சாலமன் பாப்பையா உரை:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க

கலைஞர் உரை:
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்


விளக்க உரை

கற்க - நல்ல கற்க வேண்டும் . கல்வி அனைவருக்கும் அவசியம் அதனால் கற்க வேண்டும் .

கசடற - சந்தேகங்களை களைத்து அல்லது சந்தேகங்கள் இல்லாமல் தெளிவாக முழுமையாக கற்க வேண்டும். சந்தேகங்களோடு கற்றால் அந்த கல்வி வீண் . ஆகையால் சந்தேகங்கள் இல்லாமல் கற்க வேண்டும்.

கற்பவை கற்றபின் - கற்க வேண்டியவைகளை கற்க வேண்டும். இந்த நேரத்தில் எதை கற்க வேண்டுமோ அதை கற்க வேண்டும் .

நிற்க அதற்குத் தக - படித்த பின் படித்துக்கு கருத்துக்கு ஏறார் போல் வாழ வேண்டும் அல்லது படித்த கருத்தை அல்லது செயலை பயன்படுத்தி பார்க்க வேண்டும் .