Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

சினிமா விழாக்களுக்கு 'நோ' முதல்வரின் புதிய முடிவு

முதல்வர் பொறுப்பை கவனிக்காமல் எந்நேரமும் சினிமா விழாக்களில் நேரத்தை முன்னாள் முதல்வரை காட்டமாக விமர்சித்து வந்த ஜெ. இந்நாள் முதல்வரானதும் என்ன செய்யப் போகிறார் என்று ஊரே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. ஏனென்றால், அவர் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தாயே... தமிழே என்று பழைய ரெக்கார்டை பட்டுத்துணியால் துடைத்து மீண்டும் சுழல விட்டார்கள் கோடம்பாக்கத்தில்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் வர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, பெப்ஸி அமைப்பினர் புதிய முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்றும் விரும்பினார்களாம்.
இதையெல்லாம் புறந்தள்ளிய ஜெ. எனக்கு நிறைய மக்கள் பணிகள் இருக்கு. இன்னும் ஐந்து வருஷத்துக்கு சினிமா விழாக்கள் எதுக்கும் வர்ற ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம் கறாராக! இந்த பதிலால் அதிர்ந்து போயிருக்கிறது சினிமா வட்டாரம்.


Source : TamilCinema.com

முதல்வர் ஜெயலலிதா


* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளான அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க, அரசுப் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை வழங்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.


தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற புதிய துறை...
அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துறைக்கு 'சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்

Source : Vikatan.com