Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts

யார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா?

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கடவுள் இல்லைனு சொல்ற நம்ம பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை மட்டுமே இழிவாக பேசுகிறார்களே தவிர மற்ற மதங்களாகிய கிறித்துவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையுமே குறித்து வாயே திறப்பதில்லை.

ராமரையும் மற்ற இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கும் கருணாநீதி கூட ரம்ஜான் சமயத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று கூழ் குடித்து நபிகள் நபிகளின் பெருமைகளை பேசி மகிழ்கிறார். கிறித்துவ பாதிரியார்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அவர்கள் செய்யும் சேவையை புகழ்ந்து பேசுகிறார்.இதேப்போல இவர் என்றாவது இந்து கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தையோ இல்லை கொடியேற்றத்தையோ துவங்கி வைத்திருக்கிறாரா?

மூடநம்பிக்கையை எதிர்கிறேன் என்றால் அதுதான் எல்லா மதத்திலும் இருக்கிறதே.

சரி இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையர் வாக்கிற்காகதான் இப்படி பேசுகிறார்கள் என்றால், அரசியலில் அல்லாத பகுத்தறிவாதிகள்(???) கூட இதெப்போல் தான் பேசுகிறார்கள். உதா: சத்தியராஜ். கடவுள் இல்லைனு சொல்ற இவர் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இழிவாக பேசியதில்லை. சரி இவர்கள் அனைவரும் மக்களின் அறியாமையை போக்க பாடு படுகிறேனு மேடையில் வாய் கிழிய பேசுகிறார்களே, அவர்கள் வீட்டிற்கு போய் பார்த்தால் அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.

முதல்ல உங்க வீட்டை திருத்திங்கள் அப்புறமா மக்களை திருத்தலாம்னு சொன்னா, நான் அவங்க சுதந்திரத்தில் தலையிடுவதில்லைனு ஒரு சப்பைகட்டு. உங்க பொண்டாட்டு புள்ளைகள் சாமி கும்பிட்டு புஜை பண்ணுனா அது அவங்க நம்பிக்கை, அதையே மக்கள் பண்ணுனா அது மூடநம்பிக்கை. இது என்னங்க நியாயம்?

Ok Coming back to the point... மற்ற மதத்தை பற்றி வாயே திறக்காமல் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடிப்பதற்க்கு காரணம் என்ன?

பயம்.

இந்து மதத்தை தவிற வேறு எந்த மதத்தை கிண்டல் செய்தாலும் அவர்கள் மறுநாள் நிம்மதியாக நடமாட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மதம் மீது அவ்வளவு பற்று, அதை யாரேனும் இழிவாக பேசினால் ஒன்று கூடி எதிர்பார்கள். ஆனால் இதை இந்து மதத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி யாராவது ஒன்று கூட எதிர்தால் அவர்கள் மதவாதிகள், பரதேசிகள் என முத்திரை விழும்.

எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.

நன்றி : http://bleachingpowder.blogspot.com/2008/07/blog-post_30.html