Showing posts with label mother. Show all posts
Showing posts with label mother. Show all posts

இவள் ஒரு தெய்வத்தாய் !



 ''அப்பப்பா... இதுகள வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியலடா சாமீ'' என்று பல சமயங்களில் குழந்தைகளைப் பற்றி அலுத்துக் கொள்வோம். இத்தனைக்கும் எப்போதும் ஓடியாடி, சுறுசுறுவென்று திரியும் குழந்தை களை வைத்துக் கொண்டே!
இங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, கொஞ்சம்கூட நடமாடவே செய்யாத மூன்று குழந்தைகளை, துளிகூட பாசம் குறையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார் கிராமத்து மணம் மாறாத வெள்ளந்தித் தாய்!



திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திராவுக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் செல்வி, செல்வம் மற்றும் சுகன்யா மூன்று பேரும் முழுமையாக மூளை மற்றும் உடல் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக முடங்கியே கிடக்கின்றனர்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது சந்திராவின் சின்னஞ் சிறிய வீடு. உள்ளே நுழைந்தால்... சிறிய அறை ஒன்றில் வரிசை யாகப் படுத்திருக்கின்றன மூன்று குழந்தை களும். கண்களை அகல விரித்து நம்மை பார்த்து, ஏதேதோ சத்தத்தை எழுப்பி வரவேற்கின்றன!


''வீட்டுக்காரர் கொத்து வேலை செய்றார். கல்யாணமான ஒரு வருஷத்துக்குப் பிறகு, முதல்ல செல்வி பொறந்துச்சு. எல்லா குழந்தைங்கள மாதிரிதான் நடமாடிட்டிருந்தா. ஆனா, நாளடைவுல கால், கைகள்ல அசைவு இல்லாம இருந்ததால டாக்டர்கிட்ட காட்டி னோம். அப்போதான்... பிறவியிலயே உடல் வளர்ச்சி முறையா இல்லைங்கறது  தெரிஞ்சுது'' விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்த சந்திரா...
''ஆண்டவன் விட்ட வழினு மனசை தேத்திக் கிட்டு வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா, அடுத்தடுத்து பிறந்த ஆணு, பொண்ணுனு (செல்வம் மற்றும் சுகன்யா) ரெண்டு குழந்தைக்கும் அதே கதிதான். மனசொடிஞ்சு போன வீட்டுக்காரர் குடிக்க ஆரம்பிச்சார். அதனால, தினமும் வீட்டுல சண்டைதான். 'தற்கொலை செஞ்சுக்குவோம்'ங்கற நினைப்பு கூட வந்திருக்கு. ஆனா, 'இந்தக் குழந்தைங்கள யார் காப்பாத்துவா?'னு நினைக்கும்போதே... அந்த நினைப்பெல்லாம் ஓடிடும்.
எட்டு வருஷத்துக்குப் பிறகு, நாலாவதா பெண் குழந்தை (அந்தோணியம்மாள்) பிறந்தா. நல்லவேளையா எந்தக் குறையும் இல்ல. வள்ளியூர்ல இருக்கற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஏழாவது படிக்கறா. எங்க சோகத் தைப் பார்த்துட்டு, ஃபீஸ் செலவையெல்லாம் ஸ்கூல் நிர்வாக பாத்துக்குது. அவள நல்லா படிக்க வெச்சு, நடமாட முடியாம கிடக்கற மத்த குழந்தைங்கள கவனிக்கற அளவுக்கு உருவாக்கணும்கறதுதான் என்னோட ஆசை'' என்று சொல்லும் சந்திராவுக்கு, அடுத்ததும் ஒரு சோகம்!
''இனி, நல்லபடியாதான் குழந்தை பொறக் கும்னு அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு குழந்தை (அந்தோணிராஜ்) பெத்துக்கிட்டோம். ஆனா, பழையபடியே பிரச்னை. நடமாட முடியாம, பேச்சும் சரியா வராம அவதிதான். உள்ளூர் ஸ்கூலுக்கு நான் தூக்கிட்டுப் போய் உட்கார வெப்பேன். சுவத்துல சாய்ஞ்சுகிட்டு உட்கார்ந்திருப்பான். ம்... நல்லா படிக்கறதா டீச்சர் சொல்றாங்க'' என்று பெருமூச்சு விடுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குழந்தைகளுக்குமே அந்தச் சின்னஞ்சிறு அறைதான் உலகம். பசித்தால் அழ வேண்டும் என்பதுகூட சொல்லத் தெரியாமல் வளர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு... நேரம் தவறாமல் படுக்கையிலேயே ஊட்டிவிடுகிறார் சந்திரா. 'ஜீன்களின் கோளாறு... சொந்தத்தில் திருமணம் முடித்தது' என்றெல்லாம் டாக்டர்கள் காரணம் சொல்கிறார்களாம். ஆனால், இதுதான் என்று உறுதிப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு நேரமோ, வசதியோ, வாய்ப்போ இல்லாமலிருக்கிறார் சந்திரா.
''ஊரைவிட்டு வெளியில போய் 20 வருஷமாச்சு. உள்ளூர் விசேஷத்துக்கு மட்டும் போயிக்கிட்டிருந் தேன். ஒரு தடவை, 'இப்படிப்பட்ட பிள்ளைகளை வீட்டுல வெச்சுக் காப்பாத்தி என்ன பிரயோஜனம்? பேசாம கொன்னு போட்டுடு’னு நெஞ்சுல இரக்கமே இல்லாம சிலர் சொல்லவும்... அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன். அதிலிருந்தே எதுக்கும் போறதில்ல'' என்று குமுறுகிறார் சந்திரா.
''இந்தக் குழந்தைகளை நாங்கள் பராமரிக்கிறோம்... நிறைய பண உதவி செய்கிறோம்... ஏ.சி. அறையிலயே குழந்தைகள தங்க வைக்கலாம்... வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வரும்'' என்றபடி பலரும் அணுகியபடியே இருக்கின்றனர்.
அவர்களுக்கெல்லாம் இந்தத் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே பதில் -
''நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்.

- If God Is Great Mother is Greatest.

அதேநேரத்தில். இப்படிப்பட்ட நிலமைக்கான காரணத்தைய்ம் ஆராய வேண்டியிருக்கிறது.
1) படிப்பறிவு இல்லாமை
2) அடிப்படை மருத்துவ வசதி இல்லாத்து
3) மிதமிஞ்சிய நம்பிக்கை- பிரச்சினையுடன் பிறந்த மூன்று குழந்தைகளுக்குப் பிறகும் நான்காவது குழந்தை பெற்றுக்கொண்டது; கடவுளின் அருளால் குறை ஏதும் இல்லாமல் இருப்பதை நினைத்து திருப்தி அடையாமல் மறுபடியும் ஒன்று தேவையா?

"நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்."- இதெல்லாம் காட்க நல்லாத்தான் இருக்கு! ஆனால் உங்களுக்குப் பிறகு இவர்களை யார் கவனிப்பார்கள்? அதற்காக எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்துவிட்டு போகப்போகிறார்கள்? என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு பொறுப்பில்லாத தாயாகவேத் தோன்றுகிறார்.