தமிழனின் தீராத சனி -திராவிட இயக்கங்கள்!

அனைவருக்கும் தெரிந்த, பெரும்பாலனவர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் இருப்பதைத் தான் தலைப்பாகச் சொல்லி இருக்கிறேன்.

டி.ஆர் பாணியில்...
சனிக்கோ எள்ளு,பெரியார் திராவிடனுக்கோ ஃபுல்லு...
பணத்தைக் கண்டு விடுவதோ ஜொள்ளு
இவர்களின் கொள்கை நாடகம் ஒரு லொள்ளு
இந்த ஈழப் பிண வியாபாரிகளைப் (திராவிட இயக்கங்கள்) புறம் தள்ளு
தமிழன் விழித்தால் உங்கள் தலையில் விழும் கல்லு
பெரியாரின் திராவிடனே நில்லு...
திராவிடன் கேட்கிறேன் சொல்லு!

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்தக் கும்பலைப் பெரியாரின் திராவிடனாகவும், நம்மைப் திராவிடனாகவும் சொல்லி இருக்கிறேன். பெரியார் வந்து திராவிடத்தைக் கண்டுபிடிக்க வில்லை. அவருக்கு ஏற்றார் போல திராவிடத்தை மாற்ற முயற்சித்தார், அப்படி மாறியவர்களே பெரியார் திராவிடன். ஏதோ திராவிடனை இவர்கள் தான் லீசுக்கு எடுத்தது போல பேசுவது உண்மைத் தெர்ந்தவர்களுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும் : )
-----------------------------------------------------------------------------------
திராவிட இயக்கமும், சனியும் ஒரு ஒப்பீடு !
இருவருக்கும் கருப்பு தான் பிடித்த நிறம்.
காக்கா - சனிப்பகவானுக்குப் பிடித்த வாகனம் .காக்கா பிடிப்பதே திராவிட அரசியலின் தாரக மந்திரம்.
சனி நம் வீட்டிற்கு வந்தால் தனி மனிதனுக்கு கஷ்டம்திராவிட இயக்கம் இங்கே வந்ததால், தமிழ்நாட்டிற்கே கஷ்டம்!
2 1/2 வருடத்திற்கு ஒரு முறை வீடு மாறுபவர் சனிகாசு கொடுத்தால், எப்பொழுதானாலும் கொள்கை மாறுபவர்கள்

திராவிட இயக்கங்கள்! காரியம் கைகூட, சனி பகவானுக்கு வைப்பது எள்ளுதமிழனை ஏமாற்ற திராவிட இயக்கங்களுக்கு கொடுப்பது, மந்திரி பதவியும், ஃபுள்ளும்.
ஜென்ம சனியே 7 1/2 வருடம்இந்த சனி எத்தனை வருடம்?
-----------------------------------------------------------------------------------
ஈழத்துப் பிணங்களின் நெருப்பில்,பதவிக் குளிர்க்காயும்,பெரியார் திராவிடர்கள்..!
இது தெரியாமல்கொள்கை என நினைத்துஜால்ரா அடிக்கும்திராவிடத் தொண்டர்கள்..!
திராவிடனே யார்என்று தெரியாதஅப்பாவி பொதுஜனம்..!
-----------------------------------------------------------------------------------
என் கட்சி என் குடும்பம்
என் சொத்து என் கொள்ளை
இதுவே எங்களின் கொள்கை எதிர்த்துப் பேசினால்
பார்ப்பனியம் என்பேன்
மூடநம்பிக்கை என்பேன் தமிழ் விரோதி என்பேன்
ஆரிய மாயை என்பேன் திராவிடத்துரோகி என்பேன்
அடங்கிப் போனால் உன்னைப் பெரியார்த் திராவிடன் என்று சொல்லி
வார்டு கவுன்சிலர் ஆக்குவேன்...!
- தமிழினத் தலைவரும், தமிழர்த் தலைவரும்..


நன்றி : http://poimugam.blogspot.com/2009/09/blog-post.html

பள்ளியில் முதலிடம் பெற்றும் படிக்க வழியற்ற வெட்டியான் மகன்

பத்தாம் வகுப்பில் 474 மதிப்பெண் பெற்ற மயான வெட்டியான் மகன் தனசேகரபாண்டியன் மேல்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார்.

மதுரை பாக்கியநாதபுரத்தை சேர்ந்த பாண்டி, தத்தனேரி மயானத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது மகன் தனசேகர பாண்டியன், கனகவேல் காலனி ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவரது மார்க் விபரம்:தமிழ்-94, ஆங்கிலம்- 89, கணிதம்-100, அறிவியல்-98, சமூகஅறிவியல்- 98.

வறுமை குடும்பம்: தந்தை பாண்டி தத்தனேரி சுடுகாட்டில் வெட்டியான் உதவியாளராக பணியாற்றுகிறார். குடும்ப வறுமையால் பாண்டி மேல்படிப்புக்கு செல்ல முடியவில்லை. பள்ளி முதல்வர் தாமஸ் கிறிஸ்டோபர் கூறுகையில், அனைத்து வகுப்புகளிலும் தனசேகர பாண்டியன் முதலிடம் பெறுவார். எனவே அவருக்கு வகுப்பாசிரியை இந்திரா உட்பட ஆசிரியர்கள் சிறப்பு கவனம் எடுத்தனர். மாவட்ட ராங்க் பெறாவிட்டாலும்,பள்ளியில் முதலிடம் பெற்றுவிட்டார்'' என்றார்.

தந்தை பாண்டி கூறுகையில், "வேறெந்த வருமானமும் இல்லாத நிலையில், வருவாய் போதவில்லையென்றாலும் எனது மகன், மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். எனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மேலும் படிக்க வைக்க வழியில்லை. எனது மகன் நன்கு படிப்பார் என்பதால் எனது தொழிலில் ஒருபோதும் அவரது உதவியை நாடியதில்லை'' என்றார்.

தனசேகர பாண்டியன் கூறுகையில், உயர்கல்வியில் மருத்துவத் துறையை தேர்வு செய்ய விரும்புகிறேன். ஆனால் பிளஸ்2 படிப்பே கேள்விக்குறியாகிவிடும் போல உள்ளதுஎன்றார். இவருக்கு உதவ விரும்பினால், "217, அந்தோணியார் கோயில் குறுக்குத் தெரு, பாக்கியநாதபுரம், தத்தனேரி, மதுரை-18' என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். பள்ளி முதல்வரை 94430 20125 ல் அழைக்கலாம்.

நன்றி: தினமலர்

இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?
ஏன் சார் ஏன்….
இத்த தான்…

திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..

நன்றி : http://priyatamil.wordpress.com/page/2/