வந்தன சிவா

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

−க்கட்டுரையாசிரியரின் கருத்துக்களில் நவீன தொழில் நுட்பங்களை முற்றாக நிராகரிக்கும் போக்கு அவ்வப்போது வெளிப்பாட்டாலும், சுற்றாடலையும், மனிதகுலத்தையும் பற்றிய கரிசனை எதுவுமில்லாமல், அதிக லாப வேட்கை காரணமாக பல தேசிய நிறுவனங்கள் விஞ்ஞான தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதுபற்றி சிறப்பான முறையில் விமர்சிக்கப்படுவதுடன் −ப்போக்கிற்கு எதிராக சர்வதேசரீதியில் உருவாகி பலமடைந்து வரும் மக்கள் −யக்கங்கள் அடைந்துவரும் வெற்றிகள் பற்றிய சித்திரத்தையும் தருகிறது. உலகமயமாக்கலின் மற்றொரு கோரமுகத்தைத் தரிசிக்க முடிகிறது.

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

முதலில் நான் சந்தைகளை நேசிக்கிறேன் எனக்கூறி எனது பதிலை தொடங்குகிறேன். உள்ளூர் 'சப்ஜீகளை விற்பனை செய்யக்கூடிய, ஒருவர் பெண்களோடு அளவளாக்கூடிய, உள்ளூர் சந்தைகளை நான் நேசிக்கிறேன். உண்மையிலேயே வேதனையான விடயம் என்னவென்றால், சந்தை என்பது வாழ்க்கைக்கான கோட்பாட்டினை நெறிப்படுத்தும் ஒரே விடயமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான். அத்துடன் 'வோல் ஸ்ட்ரீட்' விழுமியத்தின் ஒரே மூலமாக மாறியுள்ளது. ஏனைய சந்தைகளும் விழுமியங்களும் காணாமற் போகின்றன. −வற்றையே நான் நிராகரிக்கிறேன். தண்ணீரின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால்கூட நீர்வளப்பேணலுக்கும், அரிதான அதனை முகாமைப்படுத்துவதற்குமான தீர்வு அதன் கடைசித் துளியைக்கூட விலை கொடுத்து வாங்கக்கூடியவர்களின் கரங்களிலே அதனை விடுவதல்ல. புதுப்பித்தல் என்ற எல்லைக்குட்பட்டவாறு நிலையிருத்தலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அதனை சமூகத்தின் கைகளிலேவிட வேண்டும். அது சந்தைத் தளத்திற்கு அப்பால் கொண்டு வரப்பட்டு சமூகத்திடம் மீண்டும் கையளிக்கப்பட்டு பொதுமையான முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும்.

நிலையிருப்பு சனத்தொகை −ல்லாத −டத்தில் நிலையிருப்பு அபிவிருத்தி நிலவ முடியுமா?

நிலையிருப்பற்ற சனத்தொகை அதிகரிப்பு (non sustainable population growth) என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் அறிகுறியாகும் என்றே நான் நினைக்கிறேன். சனத்தொகை அதிகரிப்பு என்பது சுயமாக தனி −லட்சணமாக ஏற்படுவதில்லை. −த் தரவுகளைப் பாருங்கள் 1800 வரை −ந்தியாவின் சனத்தொகை நிலையானதாக −ருந்து வந்தது. குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமையும் நிலங்கள் −ழக்கப்பட்டமையுமே சனத்தொகை அதிகரிப்பு தொடங்குவதற்கு ஏதுவாகின. −ங்கிலாந்தில் விவசாயிகளை பொதுநிலத்தை விட்டு வெளியேற்றிய பின்னரே மிகக்கூடிய சனத்தொகை அதிகரிப்பு வீதம் காணப்பட்டது. மக்களின் வளங்கள் −ழக்கப்படுவதுதான் ஜீவாதார தேடலை உருவாக்குகிறது. நிச்சயமற்ற சந்தையில் அன்றாட வேதனத்திற்காக விற்கவேண்டிய உழைப்பால் வளங்கள் பதிலீடு செய்யப்படுவதுதான் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. சனத்தொகை அதிகரிப்பு என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் விளைவாகும்.

விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவன் நான். உலகமயமாக்கல் −ல்லாத வேளையிலும் விவசாயிகள் சுரண்டலுக்கு உள்ளாகினர். உலகமயமாக்கல் நவகாலனியத்திற்கு −ட்டுச் செல்லப் போகின்றது என்ற தங்களது கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எம்மால் உலகமயாக்கலுக்கு வெளியே நிற்க −யலாது. உலக வர்த்தக அமையம் (WTO) ஒரு யதார்த்தமாகிவிட்டது - தாங்கள் கூறியதைப் போல எந்த ஒரு நாடும் அதிலிருந்து தப்பிவிடமுடியாது...

WTO விதிகள் கடதாசித்தாள்மீது எழுதப்பட்டவையே தவிர, நான் எனது விரிவுரையிலே குறிப்பிட்டதைப் போல, கடவுளால் வழங்கப்பட்டவை அல்ல. எனவே, அவை −ந்த மண்ணையும் கங்கைகளையும் போல மாற்றமுடியாத யதார்த்தங்கள் அல்ல. அவ்விதிகள் மாற்றப்படவேண்டியவை. 'சீட்டில்' மாநாடு கூறும் செய்தி −துதான். அதனை மாற்றுவதற்கான வழி யாதெனில் மக்களின் ஜீவாதாரங்களை கருத்திற் கொள்ளச் செய்வதும் வர்த்தகத்தின் ஒவ்வொரு படிநிலையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களிலும் வளங்களின் நிலையிருத்தலை கருத்திற் கொள்ளச் செய்வதுமாகும். அவ்விதிகள் நிலையிருத்தலையும் மக்கள் பாதுகாப்புடன் −ருக்கும் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

−ந்தியாவில் விவசாயிகள் எதிரிடையான மானியத்தையே பெறுகிறார்கள்.. (உரிய) மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியானால் அசமத்துவமான போட்டியாளர்கள் உலகமயமாக்கலை நோக்கிச் செல்வது எவ்வாறு?

உண்மையான பிரச்சினையே அதுதான். சமதையை ஏற்படுத்தும் தளம் ஒன்று எமக்கு வாய்க்கும் என்று எம்மிடம் கூறப்பட்டது. WTO வீதிகள் வரையப்பட்டபோது −ந்திய விவாசாயிகளுக்கு நீதியான சந்தை ஒன்று எமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. உருகுவே பேச்சுவார்த்தையுன் பின்னர் GATT ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை அந்த ஒரே ஒரு பிரதான காரணத்தை முன்வைத்தே −ந்தியா நியாயப்படுத்தியது. (ஆனால்) அது தலைகீழாக மாறிவிட்டது. எம்மிடம் −ப்போதிருப்பது மிகவும் அசமதையை ஏற்படுத்தும் தளமாகும். வடநாடுகள் அல்லது OECD நாடுகள் 343 பில்லியன் டொலர்களை மானியமாகக் கொடுக்கின்றன. உருகுவே பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற பின்னர் −ம்மானியம் உண்மையில் −ரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் −ந்தியா எதிரிடையான மானியமாக 25 பில்லியனை (மாத்திரமே) வழங்குகின்றது. −ங்கு ஒருவர் வடக்கு எவ்வாறு கூடுதலான மானியத்தை வழங்குகிறது என வாதமிடலாம். −வ்வாதம் வேறு திசைநோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும் என நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறு விவசாயிகளையும், மண்ணையும், நீரையும், உயிர்ப்பன்மயத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்பது... முழு தவறிழைக்கத்தக்க வர்த்தக அமைச்சர்களாலும் வர்த்தக செயலாளர்களாலும் வரையப்பட்ட வர்த்தகவிதிகளை... −வ் அசமத்துவமான நிலைத்தனமானது −ப் புவியையும் உற்பத்தியாளர்களையும் அழித்துவிடாமல் −ருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் மீள்வரைவது எவ்வாறு என்பது பற்றியே வாதிட வேண்டும்.

கலாநிதி சிவா அவர்களே, உற்பத்தித் திறன் குறைந்த பயிர் உற்பத்தி செய்வதும், உயிர்பன்மயத்தையும் உயிர்க்கரு திரள்வுகளையும் பேணுவதும் உண்மையிலே விவசாயினது பணியா? −ப்பணியை நிபுணர்களிடம் விடக்கூடாதா?

நல்லது. பெண்விவசாயிகள் என்ற நிபுணரிடம் அப்பணியை விட்டுவிடுவது பற்றி நான் பேசினேன். −துவரை எமக்கு உயிர்ப்பன்மயம் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் உயிர்ப்பன்மய நிபுணராக பெண்கள் - பால் பிரிவுப்படி - −ருக்க நேர்ந்ததுதான். சிறிய விவசாயிகளாக அவர்கள் உலகின் மிக வறிய பகுதியில் வாழ நேர்ந்ததுதான். ஏனெனில் அவர்களது நோக்கு நிலையில் அது அவர்களுக்கு உற்பத்தித்திறன் மிகுந்ததாக உள்ளது. ஒரு தனிஏகபோக வர்த்தக நிறுவனத்திற்கு அது உற்பத்தித் திறனற்றதாக −ருக்கலாம். ஏனெனில் அவற்றிற்குத தேவையானது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் சோளம் நட வேண்டும் அல்லது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் கோர்னோலா வளர்க்க வேண்டும் என்பதாகும். ஆனால் அது உற்பத்தி திறன் மிக்கது. மிகச் சிறப்பான முறையில் நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி குடும்பத்திற்கு உணவூட்டவும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய சிறிதளவு உபரியைப் பெறவும், உங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பவும் போதுமானது. உண்மையில் சமூகங்களே −வ்வளங்களை எமக்காக காப்பாற்றி வைக்கின்றன. வேறு எவரது கரங்களிலும் அவை −ருக்கும்போது எம்மால் அதில் நம்பிக்கை வைக்க முடியாது.

நான் முன்னர் மன்சான்டோவுடன் பணியாற்றினேன். ஒரு சாதாரண வினாவை உங்களிடம் நான் வினைவ வேண்டும். உத்தேசமாக சமுதாய ஆளுகைக்குட்பட்ட சுற்றுவட்டாராம் ஒன்றை அதன் நிலையிருப்பை உறுதிசெய்யும் விதத்திலேயே அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட்டால், −ந்தியா போன்ற நாடுகளுக்கு தாங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

சமூகங்களை ஸ்தாபனப்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமும், ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள மக்களுக்கும் தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன்மூலமும், கூட்டு செயற்பாட்டின் மூலம் மாத்திரமே நிலையிருப்பு செய்யக்கூடிய வளங்களை கூட்டாக முகாமைப்படுத்தக்கூடிய விதத்தில், மக்கள் பங்கேற்கும் ஜனநாயக கட்டுமானத்திற்கூடாக அத்தகைய அளவுகோலை உருவாக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக நாம் ஈடுபட்டு வருகிறோம். என்னிடம் ஆழமான குழாய் கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு தேவையான பணமும் அதிகாரமும் −ருந்தால் எனது மிகவும் வறிய பெண்மணி ஒருத்தியாகத்தான் −ருப்பாள். ஆகவே, ஒரு கிராமத்தின் நிலத்துகடியில் உள்ள நீர்வள பேணுகைக்கான ஒரே வழி காரஷ்−ல் தண்ணீர்ப் பஞ்சாயத்து செய்ததைப் போல செய்வதுதான் - நீரை வரையறைக்குட்பட்ட வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதே அதுவாகும். தாக்க விளைவுகளை மக்கள் உணரக்கூடிய விதத்தில் ஆளுகை முறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆகவே பன்பமுகப்படுத்தப்பட்ட, நேரடியான ஜனநாயகத்தை புனர்நிர்மாணம் செய்யவேண்டிய தேவை எமக்குள்ளது. பயிரிடுவோரை தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களாக கருதவில்லை. ஏனெனில் அவர்களது செயல்களின் விளைவுகள் அயலவர்களால் ராஜவண்ணத்துப் பூச்சியை நான் கொன்று விடுகிறேன். கூட்டுத்துவம் என்பது சமூகங்களின் ஒருமைப்பாடாகும். −வையை பிரதானமானவை - தனிமனித பயிரிடுவோன் அல்ல. −வையே தீர்மானம் நிறைவேற்றும் அடிமட்ட அலகுகளாகும். −வற்றிற்கே கூட்டுத்தாபனங்களும் அரசாங்கங்களும் பதிலளிக்க வேண்டும். சீட்டிலுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனை −துவாகும். சரியான −டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சரியான மட்டத்தில் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் கண்காணிப்பை வட்டாரமயப்படுத்தும் −ப்பரிசோதனையானது - எமது உயிருக்கு உலகமயமாக்கல் அச்சுறுத்தல் விடுத்தபோதும் - உலகெங்குமுள்ள சமூகங்கள் ஈடுபட்டு உருவாகிக் கொண்டிருக்கும் புதுவிதமான ஜனநாயக நிறுவனமாகும்


Source : http://www.aaraamthinai.com/interview/apr18vsiva.asp

நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!

மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.



சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

 நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!


நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.




"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.

இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.

"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.
 
இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.


சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!

- குள.சண்முகசுந்தரம்


படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

***
ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.

அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.

கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...

உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்." - இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய... http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

Source : Vikatan

என் கேள்விக்கு என்ன பதில்.