உன்னதமான ஒரு மனிதர்

''ஒருவரது மரணம் அவருக்கான முடிவு மட்டுமல்ல... அது ஒரு வகையில் மற்றவர்களுக்கானப் படிப்பினை. நேற்று வரை எலும்பும் சதையுமாக உயிர் உள்ள உறவாக உலவிய ஒருவர், பிணமாகக் கண்முன் விழுந்துகிடப்பதைக் காணும்போது வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பேராசையும் ஒரு கணத்தில் உடைத்துபோகும்!'' தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பாபு. இவர், காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைத் தொழிலாளி. ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பிரேதங்களைப் பரிசோதனை செய்த பாபுவிடம் அந்தத் தொழிலுக்கே உரிய பிரத்யேக கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதது மருத்துவமனை வட்டாரமே ஆச்சர்யப்படும் சங்கதி.

''தொழிலுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. நோயாளிகள் பிரிவில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ஆள் இல்லைன்னு சொல்லி மார்ச்சுவரியில் போஸ்ட்டிங் போட்டாங்க. அரசாங்க வேலைன்னு நினைச்சு வந்தா, இப்படி பிணத்தை அறுக்கச் சொல்றாங்களேன்னு ஆரம்பத்தில் அரண்டு போனேன். பிறகு அதுவே பழகிருச்சு. சின்ன வயசுல ரோட்ல விபத்து எதுவும் பார்த்தாலே மனசு பதறும். ஆனா, இப்போ தினம் தினம் பிரேதங்களுடன்தான் வாழ்க்கை. மாசத்துக்குக் குறைஞ்சது 15-ல் இருந்து 20 பிணங்களை அறுக்க வேண்டியது இருக்கும்

விபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைஞ்ச நிலையில் பாடிகளைக் கொண்டுவருவாங்க. சமயங்கள்ல நெருங்கிய சொந்தங்களால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல உறுப்புகளை ஒண்ணுசேர்த்து ஓரளவுக்கு முகத்தில் உருவத் தைக் கொண்டுவந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைப் பேன். அப்போ அந்தச் சொந்தக்காரங்க முகத்தில் வருத்தத்துக் கிடையிலேயும் தெரியுற ஆறுதல்தான், இப்போ வரை இந்தத் தொழில் மேல சலிப்பு இல்லாம என்னைவெச்சிருக்கு.


பொதுவாப் பிரேதப் பரிசோதனை செய்றவங்க மது சாப்பிட்டுட்டுதான் பிணத்தைத் தொடுவாங்க. வேலை செய் றப்ப மூச்சு விட முடியாம கெட்ட வாடை அடிக்கும். ஆனா, நான் மதுவை தொடுறது இல்லை. பிணமா இருந்தாலும் நேத்து வரைக்கும் அவங்களும் ஒரு மனுஷனா, கௌரவமா நடமாடிட்டு இருந்தவங்கதானே. தண்ணி அடிச்சிட்டு பிணத்தைத் தொடுறது அவங்களை அவமானப்படுத்துறது மாதிரின்னு நான் நினைக்கிறேன்.

யாரும் கேட்டு வராத அநாதைப் பிணங்களோட இறுதிச் செலவை, சமயங்கள்ல நானே ஏத்துக்குவேன். 'வாங்குற சம்பளத்தில் உனக்கு எதுக்குய்யா இந்த வேலை’ன்னு நண்பர் கள் கேட்பாங்க. 'ஏதோ என்னால் முடிஞ்சதை என் திருப்திக்காக செய்றேன்’னு சொல்வேன்!'' என்கிற பாபு, மார்ச்சுவரியில் வேலை பார்க்கிறார் என்பது அவர் பிள்ளைகளுக்கு இன்னமும் தெரியாதாம்.


''அட, நான் இந்த வேலைதான் செய்றேன்னு என் மனைவிக்கே ரொம்ப வருஷம் கழிச்சுத்தாங்க தெரியும். தெரிஞ்சதும் கோவத்துல மேல, கீழ எகிறிக் குதிச்சா. 'ஒண்ணு வேலையை விடு... இல்லேன்னா என்னை விட்டுடு’ன்னு கட்- அண்ட் ரைட்டா சொல்லிட்டா. இந்த வேலையில் இருக்கிற மனத் திருப்தியை அவளுக்குப் புரியவெச்சேன். இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணியில் என்னைக் குளிப்பாட்டிவிடுறது அவதான். பிள்ளைங்களுக்கும் நான் என்ன வேலை செய்றேன்னு தெரியாது. ஒரு நாளைக்கு அவங்களா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்!'' என்று புன்ன கைக்கிறார் பாபு.

''காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோ மேல ரயில் மோதி, நிறைய பேரு செத்துட்டாங்க. எல்லா பிரேதங்களும் இங்கேதான் வந்திச்சு. கை வேற, கால் வேற, தலை வேற... என் முன்னாடி பிரேதங்கக் குவிஞ்சுகிடந்தப்ப மனசுக்குள்ள சுரீர்னு ஒரு வெறுமை.

இன்னிக்கும் லீவு எடுத்து வீட்டுல இருக்கிறப்ப கூட, மார்ச்சுவரிக்கு உடல் வந்திருக்குன்னு தகவல் வந்தா, உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துருவேன். எனக்காகக் காத்திருக்கிறது இறந்த உடம்பு இல்ல. நேத்து வரைக்கும் ரத்தமும் சதையுமா நடமாடுன நம்மளப்போல ஒரு மனுஷன். இறுதி மரியாதைக் காக அந்த உடம்பு எனக்காகக் காத்திருக்கக் கூடாது. இது எனக்குத் தொழில் மட்டுமல்ல; என் மனைவி, பிள்ளைகளுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற விஷயம்!'' - தன்மையான குரலில் முடிக்கும் பாபு, தனக்காக அடுத்த உடலை காத்திருக்கவைக்க விரும் பாமல் விரைகிறார்!

முதல்வர் ஜெயலலிதா


* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளான அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க, அரசுப் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை வழங்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.


தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற புதிய துறை...
அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துறைக்கு 'சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்

Source : Vikatan.com

இவள் ஒரு தெய்வத்தாய் !



 ''அப்பப்பா... இதுகள வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியலடா சாமீ'' என்று பல சமயங்களில் குழந்தைகளைப் பற்றி அலுத்துக் கொள்வோம். இத்தனைக்கும் எப்போதும் ஓடியாடி, சுறுசுறுவென்று திரியும் குழந்தை களை வைத்துக் கொண்டே!
இங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, கொஞ்சம்கூட நடமாடவே செய்யாத மூன்று குழந்தைகளை, துளிகூட பாசம் குறையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார் கிராமத்து மணம் மாறாத வெள்ளந்தித் தாய்!



திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திராவுக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் செல்வி, செல்வம் மற்றும் சுகன்யா மூன்று பேரும் முழுமையாக மூளை மற்றும் உடல் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக முடங்கியே கிடக்கின்றனர்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது சந்திராவின் சின்னஞ் சிறிய வீடு. உள்ளே நுழைந்தால்... சிறிய அறை ஒன்றில் வரிசை யாகப் படுத்திருக்கின்றன மூன்று குழந்தை களும். கண்களை அகல விரித்து நம்மை பார்த்து, ஏதேதோ சத்தத்தை எழுப்பி வரவேற்கின்றன!


''வீட்டுக்காரர் கொத்து வேலை செய்றார். கல்யாணமான ஒரு வருஷத்துக்குப் பிறகு, முதல்ல செல்வி பொறந்துச்சு. எல்லா குழந்தைங்கள மாதிரிதான் நடமாடிட்டிருந்தா. ஆனா, நாளடைவுல கால், கைகள்ல அசைவு இல்லாம இருந்ததால டாக்டர்கிட்ட காட்டி னோம். அப்போதான்... பிறவியிலயே உடல் வளர்ச்சி முறையா இல்லைங்கறது  தெரிஞ்சுது'' விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்த சந்திரா...
''ஆண்டவன் விட்ட வழினு மனசை தேத்திக் கிட்டு வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா, அடுத்தடுத்து பிறந்த ஆணு, பொண்ணுனு (செல்வம் மற்றும் சுகன்யா) ரெண்டு குழந்தைக்கும் அதே கதிதான். மனசொடிஞ்சு போன வீட்டுக்காரர் குடிக்க ஆரம்பிச்சார். அதனால, தினமும் வீட்டுல சண்டைதான். 'தற்கொலை செஞ்சுக்குவோம்'ங்கற நினைப்பு கூட வந்திருக்கு. ஆனா, 'இந்தக் குழந்தைங்கள யார் காப்பாத்துவா?'னு நினைக்கும்போதே... அந்த நினைப்பெல்லாம் ஓடிடும்.
எட்டு வருஷத்துக்குப் பிறகு, நாலாவதா பெண் குழந்தை (அந்தோணியம்மாள்) பிறந்தா. நல்லவேளையா எந்தக் குறையும் இல்ல. வள்ளியூர்ல இருக்கற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஏழாவது படிக்கறா. எங்க சோகத் தைப் பார்த்துட்டு, ஃபீஸ் செலவையெல்லாம் ஸ்கூல் நிர்வாக பாத்துக்குது. அவள நல்லா படிக்க வெச்சு, நடமாட முடியாம கிடக்கற மத்த குழந்தைங்கள கவனிக்கற அளவுக்கு உருவாக்கணும்கறதுதான் என்னோட ஆசை'' என்று சொல்லும் சந்திராவுக்கு, அடுத்ததும் ஒரு சோகம்!
''இனி, நல்லபடியாதான் குழந்தை பொறக் கும்னு அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு குழந்தை (அந்தோணிராஜ்) பெத்துக்கிட்டோம். ஆனா, பழையபடியே பிரச்னை. நடமாட முடியாம, பேச்சும் சரியா வராம அவதிதான். உள்ளூர் ஸ்கூலுக்கு நான் தூக்கிட்டுப் போய் உட்கார வெப்பேன். சுவத்துல சாய்ஞ்சுகிட்டு உட்கார்ந்திருப்பான். ம்... நல்லா படிக்கறதா டீச்சர் சொல்றாங்க'' என்று பெருமூச்சு விடுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குழந்தைகளுக்குமே அந்தச் சின்னஞ்சிறு அறைதான் உலகம். பசித்தால் அழ வேண்டும் என்பதுகூட சொல்லத் தெரியாமல் வளர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு... நேரம் தவறாமல் படுக்கையிலேயே ஊட்டிவிடுகிறார் சந்திரா. 'ஜீன்களின் கோளாறு... சொந்தத்தில் திருமணம் முடித்தது' என்றெல்லாம் டாக்டர்கள் காரணம் சொல்கிறார்களாம். ஆனால், இதுதான் என்று உறுதிப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு நேரமோ, வசதியோ, வாய்ப்போ இல்லாமலிருக்கிறார் சந்திரா.
''ஊரைவிட்டு வெளியில போய் 20 வருஷமாச்சு. உள்ளூர் விசேஷத்துக்கு மட்டும் போயிக்கிட்டிருந் தேன். ஒரு தடவை, 'இப்படிப்பட்ட பிள்ளைகளை வீட்டுல வெச்சுக் காப்பாத்தி என்ன பிரயோஜனம்? பேசாம கொன்னு போட்டுடு’னு நெஞ்சுல இரக்கமே இல்லாம சிலர் சொல்லவும்... அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன். அதிலிருந்தே எதுக்கும் போறதில்ல'' என்று குமுறுகிறார் சந்திரா.
''இந்தக் குழந்தைகளை நாங்கள் பராமரிக்கிறோம்... நிறைய பண உதவி செய்கிறோம்... ஏ.சி. அறையிலயே குழந்தைகள தங்க வைக்கலாம்... வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வரும்'' என்றபடி பலரும் அணுகியபடியே இருக்கின்றனர்.
அவர்களுக்கெல்லாம் இந்தத் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே பதில் -
''நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்.

- If God Is Great Mother is Greatest.

அதேநேரத்தில். இப்படிப்பட்ட நிலமைக்கான காரணத்தைய்ம் ஆராய வேண்டியிருக்கிறது.
1) படிப்பறிவு இல்லாமை
2) அடிப்படை மருத்துவ வசதி இல்லாத்து
3) மிதமிஞ்சிய நம்பிக்கை- பிரச்சினையுடன் பிறந்த மூன்று குழந்தைகளுக்குப் பிறகும் நான்காவது குழந்தை பெற்றுக்கொண்டது; கடவுளின் அருளால் குறை ஏதும் இல்லாமல் இருப்பதை நினைத்து திருப்தி அடையாமல் மறுபடியும் ஒன்று தேவையா?

"நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்."- இதெல்லாம் காட்க நல்லாத்தான் இருக்கு! ஆனால் உங்களுக்குப் பிறகு இவர்களை யார் கவனிப்பார்கள்? அதற்காக எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்துவிட்டு போகப்போகிறார்கள்? என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு பொறுப்பில்லாத தாயாகவேத் தோன்றுகிறார்.